About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 19 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 63

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 33

யுகா³தி³ க்ருத்³ யுகா³ வர்த்தோ 
நைக மாயோ மஹாஸ²ந:|
அத்³ருஸ்²யோ வ்யக்த ரூபஸ்²ச 
ஸஹஸ்ர ஜித்³ அநந்த ஜித்:||

  • 301. யுகா³தி³ க்ருத்³ - யுக ஆரம்பத்தின் படைப்புக் கடவுள்.
  • 302. யுகா³ வர்த்தோ - யுகங்களைத் திரும்பத் திரும்ப வரும்படிச் செய்பவன்.
  • 303. நைக மாயோ - அநேக மாயைகளை உடையவன்.
  • 304. மஹாஸ²நஹ - உலகமுண்ட பெருவயிற்றன்.
  • 305. அத்³ருஸ்²யோ - காணமுடியாதவன்.
  • 306. வ்யக்த ரூபஸ்²ச - தெளிவாகக் காணப்படும் திருமேனியை உடையவன்.
  • 307. ஸஹஸ்ர ஜித்³ - காலங்களை வெற்றி கொள்பவன்.
  • 308. அநந்த ஜித்து - எல்லை காண முடியாத திருமேனியை உடையவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - இரண்டாம் அத்யாயம் அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

உணர்ச்சி முன்னால் வரும், ஞானம் பின்னால்தான் வரும். முதலில் தர்மம், அதர்மம் எல்லாம் தெரிந்த ஞானி போல் உணர்ச்சியில் பேசிய அர்ஜுநன் கடைசியில் தன் நிலை உணர்ந்து தனக்கு நியாயம், அநியாயம் ஒன்றும் தெரியவில்லை, புலன்களை வாட்டும் இந்தத் துன்பத்தைப் போக்கும் வழியும் எனக்கு தெரியவில்லை. தனக்கு நல்லதை எடுத்துக் கூறு என்று பகவானை சரணடைகிறான் அர்ஜுநன். 

அர்ஜூனனுக்கு இரண்டு குழப்பங்கள்:
1.நாட்டிற்கு பெரும் ஊறு விளைவிப்பவன் உறவினரே ஆயினும் ஒரு அரசன் அவர்களைக் கொல்லலாமா? இது கொலை செய்வது என்ற வினை/செயலை பற்றியது.

2. அப்படிக் கொலை செய்வதால் தனக்குப் பாவம் வந்து சேராதா? இது கொலை செய்வது என்ற வினையால்/செயலால் ஏற்படும் பலனை பற்றியது.

மனித வாழ்க்கையின் புதிர்கள் இரண்டே 1.மரணம் 2. இன்ப துன்பம் பற்றியது. 

தன்னிடம் முழுமையாகச் சரணடைந்த அர்ஜூனனுக்கு இந்த இரண்டிற்கும் விடையாகப் பிறவியின் தத்துவத்தை பகவான் உபதேசிக்கலானார்

தவறு செய்பவன் உறவினனே ஆயினும் நீதியை நிலைநாட்ட போரிடுவதே ஒரு மன்னனின் கடமை தர்மமாகிறது. போர்களத்தில் ஒரு உடல் இன்னோரு உடலை வதைக்கிறதே அன்றி புலன்களுக்கு எட்டாத ஆத்மாவை எதனாலும், எவராலும் வதைக்க முடியாது. மரணத்தில் உடல் மட்டுமே அழிகிறது, எண்ண முடியாத அளவில் உலகெங்கும் நிறைந்துள்ள ஆத்மா என்றென்றும் அழிவதில்லை. ஆத்மா தான் வாசம் செய்யும் உடல் அழிந்தால் இன்னொரு உடலை எடுத்துக் கொள்கிறது. இல்லையென்றாலும் பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் தவிர்க்க முடியாதது. அதை நினைத்து வருந்துவதில் பயனில்லை. இத்தீயவர்களின் உடலை இன்று நீ அழிக்கா விட்டாலும் நாளை அவைகள் அழியக் கூடியதே. அதை நீ அழித்தால் உனக்கு பேரும், புகழும் வந்து சேரும், இல்லையென்றால் கடமை தவறியவன், கோழை போன்ற மரணத்தை விட மோசமான அபகீர்த்திகள் உனக்கு வந்து சேரும். எனவே உறுதியோடு போரிடு என்று முதல் சந்தேகத்திற்கு விடை அளிக்கிறார் பகவான். 

இரண்டாம் சந்தேகமான செயல் புரிவதால் வரும் பலனை பற்றி பகவான் விளக்குகிறார். வேதத்தை அறிந்தவர் போல் சுவர்க்கம், நரகம் என்று பயன் கருதும் வினை சொல்வார். அதைக் கேட்டு மதி மயங்காதே! பயன் கருதி செயல் செய்வோர் ஞானம் இல்லாதவர். செயலாற்ற மட்டுமே உனக்கு அதிகாரம். அதற்கானப் பலனை நானே முடிவு செய்கிறேன். அதனால் பலனை எதிர்பார்த்து செயல் புரிவதில் அர்த்தமில்லை. பலனைக் கருதாதவன் மனம் செயலில் மட்டுமே செல்கிறது, பலனை எதிர்பார்ப்பவன் மனமோ பல வழிகளில் செல்கிறது. இன்பம் துன்பம் போன்ற வினைப் பலன்கள் எல்லாம் புலன்களின் உணர்வே. அதனால் நன்மை தீமைகளைத் துறந்து, விருப்பு வெறுப்பின்றி செய்யும் செயலே மேலானது, பந்தத்தைப் போக்க வல்லது, இழப்பு இல்லாதது, பயத்தைப் போக்க வல்லது, என்று தனது சந்தேகத்திற்கு அடிப்படையான மதி மயக்கத்தின் காரணத்தை விளக்குகிறார். மேலும் புலன்களை அடக்கி மனதை இறைவனிடத்தில் நிலை நிறுத்தி, எதிர்பார்ப்பில்லாமல் செயல் புரிபவன் துன்பத்தில் துவள மாட்டான், இன்பத்தில் மகிழ மாட்டான், யாருக்காகவும் எதற்க்காகவும் பயப்பட மாட்டான், எதற்காகவும் யார்மீதும் கோபப்படமாட்டான் என்று பகவான் இங்கே விளக்குகிறார். சாங்கிய யோகம் ”அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்”.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.32

யதா² ஹ்யவ ஹிதோ வஹ்நிர் 
தா³ருஷ் வேக: ஸ்வயோ நிஷு|
நாநேவ பா⁴தி விஸ்²வாத்மா 
பூ⁴தேஷு சததா² புமாந்||

  • யதா² - எவ்வாறு
  • ஸ்வயோ நிஷு - தன்னை விளங்கச் செய்யும்
  • தா³ருஷு -மரக்கட்டைகளில்
  • ஹ்யவ ஹிதோ - இருக்கும் 
  • ஏகஸ் வந்ஹிர் - ஒரே தீயானது
  • நாநா இவ - பலவாக இருப்பது போல்
  • பா⁴தி ததா² ஹி - தோன்றுகிறதோ அவ்வாறே
  • விஸ்²வாத்மா புமாந் ச - ஒரே பரம்பொருள்
  • பூ⁴தேஷு - ஜீவர்களிடத்தில் நாநா புருஷராக காட்சியளிக்கிறார்

தீ ஒன்றேயாக இருப்பினும், (தன்னைத் தோன்றச் செய்கிற) நான்கு கட்டைகளில் பற்றி எரியும்போது நான்குவிதமாகத் தோற்றமளிப்பதுபோல், பகவான் ஒருவரே என்றாலும், பிரபஞசத்திலுள்ள ஒவ்வொரு பொருளிலும் உட்புகுந்து பலவாறாகச் காட்சியளிக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 11
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

வாமே பூ⁴மி ஸுதா புரஸ்²ச ஹநுமான் 
பஸ்²சாத் ஸுமித்ரா ஸுத꞉
ஸ²த்ருக்⁴நோ ப⁴ரதஸ்² ச பார்ஸ்²வ த³ளயோ: 
வாய் வாதி³ கோணேஷு ச| .
ஸுக்³ரீவஸ்² ச விபீ⁴ஷணஸ்² ச யுவராட் 
தாரா ஸுதோ ஜாம்ப³வாந்
மத்⁴யே நீல ஸரோஜ கோமள ருசிம் 
ராமம் ப⁴ஜே ஸ்²யாமளம்||

  • வாமே - இடது பக்கத்தில்
  • பூ⁴மி ஸுதா - சீதையுடனும்
  • புரஸ்²ச - முன்னால்
  • ஹநுமான் - ஹநுமனுடனும்
  • பஸ்²சாத் - பின்னால்
  • ஸுமித்ரா ஸுதஸ் - லக்ஷ்மணனுடனும்
  • ஸ²த்ருக்⁴நோ ப⁴ரதஸ்² ச - சத்ருக்னன் பரதன் இவர்கள்
  • பார்ஸ்²வ த³ளயோர் - இரு பக்கத்திலும் இருக்க
  • வாய் வாதி³ கோணேஷு ச - அஷ்ட திக்குகளிலும்
  • ஸுக்³ரீவஸ்² ச விபீ⁴ஷணஸ்² ச யுவராட் தாரா ஸுதோ ஜாம்ப³வாந் - சுக்ரீவன், விபீஷணன், கிஷ்கிந்தை யுவராஜனான தாரையின் மைந்தன் அங்கதன், ஜாம்பவாந்
  • மத்⁴யே - இவர்கள் மத்தியில் 
  • நீல ஸரோஜ கோமள ருசிம் - நீல நிறத்து தாமரைபோல அழகிய உருவத்துடன் விளங்கும்
  • ஸ்²யாமளம் - சியாமளனான
  • ராமம் - ராமனை
  • ப⁴ஜே - துதிக்கிறேன்

இடது பக்கத்தில் சீதையுடனும் முன்னால் ஹநுமனுடனும் பின்னால் லக்ஷ்மணனுடனும் சத்ருக்னன் பரதன் இவர்கள் இரு பக்கத்திலும் இருக்க அஷ்ட திக்குகளிலும் சுக்ரீவன், விபீஷணன், கிஷ்கிந்தை யுவராஜனான தாரையின் மைந்தன் அங்கதன், ஜாம்பவாந் இவர்கள் மத்தியில்  நீல நிறத்து தாமரைபோல அழகிய உருவத்துடன் விளங்கும் சியாமளனான ராமனை துதிக்கிறேன்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 46 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 46 - இந்திரன் கொடுத்த கிண்கிணி
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

என் தம்பிரானார்* 
எழிற் திரு மார்வர்க்குச்*
சந்தம் அழகிய* 
தாமரைத் தாளர்க்கு*
இந்திரன் தானும்* 
எழிலுடைக் கிண்கிணி* 
தந்துவனாய் நின்றான் தாலேலோ* 
தாமரைக் கண்ணனே! தாலேலோ|

  • எம் தம்பிரானார் - எமக்கு ஸ்வாமியா
  • எழில் - அழகிய
  • திருமார்வார்க்கு - திருமார்பை டைய
  • சந்தம் அழகிய - அழகிய நிறத்தை டைய
  • தாமரை - தாமரை போன்ற 
  • தாளர்க்கு - திருவடிகளை டைய எம்பிரானே!
  • இந்திரன் தானும் - தேவேந்திரனும் தன் பங்கிற்கு
  • எழில் உடை - அழகை டைய
  • கிண்கிணி - கிணி கிணியை 
  • தந்து - கொண்டு வந்து ஸமர்ப்பித்து
  • உவனாய் நின்றான் - உன்னருகில் பணிவன்புடன் நின்றான்
  • தாலேலோ - கண்ணுறங்கு
  • தாமரைக் கண்ணனே! - தாமரை போன்ற கண்ணழகனே!
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 

தாமரையையொத்த திருவடிகளையுடையவனே, அழகிய திருமார்பை உடையவனே, எம்முடைய ஸ்வாமியே, உனக்கு தேவேந்திரன் அழகிய கிலுகிலுப்பையை (கால்-சதங்கை என்றும் பொருள் உண்டு) கொடுத்து விட்டு அங்கு தான் நிற்கிறான், கண்ணுறங்கு, தாமரைக் கண்ணனே கண்ணுறங்கு. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 54

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கம்சனின் வதம்|

வீரர்களின் வீழ்ச்சியை கண்ட கம்சனால் இதை கண்டு பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிருஷ்ணனின் வெற்றிக்காக கொட்டப்படும் முரசின் ஒலியை கம்சனால் கேட்டுக்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை. அவருடைய சேவகர்கள் வீழ்த்தப்பட்டத்தை நினைத்து கோபமுற்றான். அந்த முரசை நிறுத்த சொல்லி கட்டளையிட்டான். கம்சன் விரக்தியில் சேவகர்களை நோக்கி, "இந்த இருவரையும் மதுராவை விட்டு வெளியே துரத்துங்கள், நந்தரை இந்த துரோகத்தை செய்ததற்காக கைது செய்யுங்கள், உடன் அந்த துரோகி வசுதேவரையும் அழித்து விடுங்கள், மனசாட்சியே இல்லாத எனது தந்தையையும் அழியுங்கள்" என்று கட்டளையிட்டான்.


கிருஷ்ணனால் கம்சனின் இந்த வார்த்தைகளை கேட்டுக்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை, கிருஷ்ணனுக்கு கோபம் அதிகமானது. கிருஷ்ணன் களத்தில் இருந்து தாவி குதித்து, கம்சனின் அரியாசனத்தின் பக்கத்தில் சென்று நின்றார். கிருஷ்ணனின் வேகத்தை பார்த்து, கம்சன் அவன் வாளினை எடுத்து அவனை காத்துகொள்ள முயன்றான், கிருஷ்ணன் கம்சனின் கிரீடத்தை கீழே தள்ளி, அவன் தலைமுடியை இழுத்து பிடித்தான். அவனது சிம்மாசனத்திலிருந்து மைதானத்தில் கம்சனை தள்ளிவிட்டான். கீழே விழுந்த வேகத்தில் கம்சன் உயிர் மாண்டான். ஒரு சிங்கம் யானையை வேட்டையாடுவது போல கம்சனின் உடலை தூக்கி தூரம் அடித்தார். சுற்றி இருந்த அனைவரும் இதனை பார்த்து பயந்தனர். ஐயோ என்று பதறினர்.


கம்சனுக்கு எட்டு சகோதரர்கள் உள்ளனர், முதல் சகோதரன் கங்கன் ஆவான், கம்சன் கொல்லப்பட்டதை பார்த்த எல்லா அண்ணன்மார்களும் களத்தில் இறங்கினர், அனைவரும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை கொல்ல முயன்றனர். பலராமன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இவர்களை தாக்க ஆரம்பித்தான், யானையின் தந்தத்தை எடுத்து, ஒருவர் பின் ஒருவராக எட்டு பேரையும், ஒரு சிங்கம் மான் கூட்டத்தை வேட்டையாடுவது போல துரத்தி துரத்தி கொன்றான். கம்சன் மனைவியும், அவன் உடன் பிறந்தோரின் மனைவிகளும் இதனை பார்த்துக் கதறி அழுதுகொண்டே இருந்தனர். கிருஷ்ணன் அனைவரின் மனைவிகளிடம் ஆறுதல் கூறினார், பிறகு அவர்களுடைய இறுதி சடங்கிற்கான ஏற்பாடு நடந்தது. 

பிறகு கிருஷ்ணனும் பலராமனும் அவர்களது தாய் தந்தையையும், தாத்தாவையும் சிறையில் இருந்து விடுவித்தனர், தாய் தந்தை கால்களில் விழுந்து கிருஷ்ணனும் பலராமனும் ஆசிர்வாதம் பெற்றனர். தாத்தா உக்ரசேனாவை மீண்டும் அரசராக்கினர். இந்த விஷயத்தை கேட்டு யசோதையும் ரோஹினியும் மதுராவிற்கு விரைந்தனர். நந்தரும், யசோதையும், ரோஹினியும் மதுராவில் சில நாட்கள் சந்தோஷமாக கழித்துவிட்டு, பிறகு கிருஷ்ணனையும் பலராமனையும் அங்கயே இருக்க வைத்து விட்டு, வசுதேவரும் யசோதையும் பிருந்தாவனத்திற்கு திரும்பினர்.

ஆனால் கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் இவர்களை வளர்த்தவர்களை பிரிய மனமில்லை. அதனால் அவர்களுடன் பிருந்தாவனத்திற்கு திரும்பி வந்தனர். இதனை கண்ட பிருந்தாவன மக்கள் மனதில் சந்தோஷம் பொங்கியது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறுபதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

060 அவன் போனான் என்றேனோ மாருதியாண்டானைப் போலே|

கிரிமி கண்ட சோழன் என ஸ்ரீவைஷ்ணவர்களால் அழைக்கப்பட்ட சோழ மன்னனால் ஏற்பட்ட பிரச்சனைகளால், ராமானுஜர், ஸ்ரீரங்கத்திலிருந்து கர்நாடகாவில் இருந்த  திருநாராயணபுரத்திற்கு சென்று சில ஆண்டுகள் தங்கினார். மனம், அனுதினமும் ஸ்ரீ ரங்கத்திற்கு திரும்பும் நாளையே எண்ணிக் கொண்டிருந்தபடியால், தனது சீடர்களை அனுப்பி, ஸ்ரீ ரங்கத்தின் நிலவரம் குறித்தும், கூரத்தாழ்வார் மற்றும் பெரிய நம்பிகளின் நலம் பற்றியும் அறிந்து வரும் வண்ணம் இருந்தார். அவர்களும், ஸ்ரீரங்கம் சென்று அங்கு கூரத்தாழ்வாரையும், பெரிய நம்பிகளையும் பார்த்து, ராமனுஜர் சொல்ல விரும்பிய செய்திகளை அவர்களிடம் உரைத்துவிட்டு, அவர்களிடம் இருந்து செய்திகளை அறிந்து வந்து ராமானுஜரிடம் கூறுவார்கள்.  


ஒரு முறை, ராமானுஜர், தனது சீடரான மாருதியாண்டான் என்பவரை அழைத்து, ஸ்ரீ ரங்கம் சென்று வருமாறு கூறினார். மாருதியாண்டான் திருவரங்கம் வந்தார். பெரிய நம்பிகள் பரமபதம் அடைந்து விட்டார் என்பதையும், சோழ மன்னனுடன் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக கூரத்தாழ்வான் கண்ணிழந்து திருமாலிருஞ்சோலையில் இருப்பதையும் அறிந்தார். அனைத்து கொடுமைகளுக்கும் காரணமான சோழ மன்னன், கண்டமாலை என்ற நோயினால் இறந்து போனதையும் அறிந்தார். இனி ராமானுஜர் ஸ்ரீ ரங்கம் திரும்பலாம் என்பதில் ஆனந்தம் கொண்ட மாருதியாண்டான், அச்செய்திகளை ராமானுஜருக்குத் தெரிவிக்க உடனே திருநாராயணபுரம் புறப்பட்டார். ராமானுஜரிடம் செய்திகளைக் கூறினார்.


ராமானுஜரைக் கண்டதும் "அவன் போனான்" (சோழ மன்னன் இறந்தான்) என்பதைக் கூறினார். ராமானுஜர் ஸ்ரீ ரங்கம் திரும்பும் நேரம் வந்ததை அறிந்து மனம் மகிழ்ந்தார். பின்னர், பெரிய நம்பிகள், கூரத்தாழ்வார் பற்றிக் கேள்விப்பட்டு மனம் வருந்தினார். சற்றும் தாமதிக்காமல், தனது சீடர்களுடன் ஸ்ரீ ரங்கம் புறப்பட்டார். ராமானுஜரின் வருகை அறிந்த கூரத்தாழ்வானும் ஸ்ரீ ரங்கம் வந்தடைந்தார். ஸ்ரீ ரங்கத்தில் மீண்டும் சேவையில் ஈடுபட்டனர்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "மாருதியாண்டான் போல், ராமானுஜரின் மனம் ஆனந்தம் கொள்ளும் வண்ணம் ஏதும் கூறினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிரந்த மகிமை

ஸ்கந்தம் 01

கங்கை உள்பட ஸப்த புண்ய நதிகளும் வந்து ஒருவருக்கு ஸேவை செய்து தங்களிடம் சேர்ந்த பாவங்களைத் தொலைக்கின்றன என்றால் அவர் எவ்வளவு புண்யசாலியாக இருக்க வேண்டும்? நிச்சயமாக அவரை நிந்தித்தது தவறு தான். மன்னிப்பு கேட்பதோடு, அவரின் புண்யத்திற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். பலவாறு சிந்தித்துக் கொண்டு பயணியானவர் வீட்டுத் திண்ணையில் தவிப்போடு அமர்ந்திருந்தார். சற்று பொழுது புலரும் தருவாயில் வெளியே வந்த அந்த மஹாத்மாவின் கால்களில் ஓடிச் சென்று விழுந்தார். 


"நான் செய்தது பெரும் தவறு ஸ்வாமி. மன்னிச்சுடுங்க. உங்க பெருமை தெரியாம நேத்திக்கு தாறுமாறா பேசிட்டேன்."

அவருக்கோ ஒன்றும் புரியவில்லை. பயணியை ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்து என்னவென்று விசாரித்தார்.

"அதையெல்லாம் விடுங்க. எனக்கொன்னும் தெரியாது. கங்கையாவது, ஸப்த நதியாவது. நான் பிறந்ததிலிருந்து இங்கேயேதான் இருக்கேன்" என்றார்.

கங்கையே இவரை மஹாத்மா என்கிறாள். இவரோ கங்கையைத் தெரியாது என்கிறாரே என்று குழம்பிப் போனார் பயணி. ஆனாலும் இந்த முறை ஏமாந்து போய் விடக் கூடாது என்று மேலும் விசாரித்தார்.

"அதெல்லாம் இருக்கட்டும். நீங்க என்ன பூஜை பண்றீங்க? ஏதாவது ஜபம் செய்யறீங்களா? உங்கள் குரு யார்?" கேள்வி மேல் கேள்வி அடுக்கிக் கொண்டே போக, அவரோ திருதிருவென்று விழித்தார். பின்னர் பேச ஆரம்பித்தார்.

"இதோ பாருங்க. பூஜையோ, ஜபமோ எனக்கொன்னும் தெரியாது. நான் செய்வதெல்லாம் ஒன்னே ஒன்னு தான்"

"என்ன அது?"

"என் வீட்டில் ஒரு பழைய புத்தகம் இருக்கு. பரம்பரை பரம்பரையாக என் கொளுத் தாத்தா, தாத்தா, அப்பா எல்லாரும் பாராயணம் செய்த புத்தகம். எனக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு அக்ஷரம் கூட தெரியாது. அதனால், நான் பாராயணம் செய்வதும் இல்லை. ஆனால், காலையில் ஸ்நானம் செய்துவிட்டு அந்த புத்தகத்திற்கு இரண்டு புஷ்பங்களைப் போட்டு ஒரு தீபம் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்யும் பூஜை. நான் வேறெந்த தெய்வத்தையும் வழிபடுவதில்லை. கோவில்களுக்கோ யாத்திரைகளோ சென்றதுமில்லை" என்றார்.

வியப்பின் உச்சிக்கே போன பயணி,

"அந்தப் புத்தகத்தை நான் பார்க்கலாமா?" என்று தயங்கி் தயங்கிக் கேட்டார்.

"வாருங்கள். காட்டுகிறேன்" என்று வீட்டினுள் அழைத்துச் சென்று பூஜையில் இருந்த புத்தகத்தை ஜாக்கிரதையாக எடுத்துக் கொடுத்தார்.

தொட்டால் பொடிப் பொடியாக உதிர்ந்து போகும் நிலையில் இருந்த அந்தப் புத்தகத்தைப் பிரித்தால் முதல் பக்கத்திலேயே ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம் என்ற எழுத்துக்கள் பளிச்சிட்டன.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்