||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 46 - இந்திரன் கொடுத்த கிண்கிணி
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
என் தம்பிரானார்*
எழிற் திரு மார்வர்க்குச்*
சந்தம் அழகிய*
தாமரைத் தாளர்க்கு*
இந்திரன் தானும்*
எழிலுடைக் கிண்கிணி*
தந்துவனாய் நின்றான் தாலேலோ*
தாமரைக் கண்ணனே! தாலேலோ|
- எம் தம்பிரானார் - எமக்கு ஸ்வாமியான
- எழில் - அழகிய
- திருமார்வார்க்கு - திருமார்பை உடைய
- சந்தம் அழகிய - அழகிய நிறத்தை உடைய
- தாமரை - தாமரை போன்ற
- தாளர்க்கு - திருவடிகளை உடைய எம்பிரானே!
- இந்திரன் தானும் - தேவேந்திரனும் தன் பங்கிற்கு
- எழில் உடை - அழகை உடைய
- கிண்கிணி - கிணி கிணியை
- தந்து - கொண்டு வந்து ஸமர்ப்பித்து
- உவனாய் நின்றான் - உன்னருகில் பணிவன்புடன் நின்றான்
- தாலேலோ - கண்ணுறங்கு
- தாமரைக் கண்ணனே! - தாமரை போன்ற கண்ணழகனே!
- தாலேலோ! - கண்ணுறங்கு!
தாமரையையொத்த திருவடிகளையுடையவனே, அழகிய திருமார்பை உடையவனே, எம்முடைய ஸ்வாமியே, உனக்கு தேவேந்திரன் அழகிய கிலுகிலுப்பையை (கால்-சதங்கை என்றும் பொருள் உண்டு) கொடுத்து விட்டு அங்கு தான் நிற்கிறான், கண்ணுறங்கு, தாமரைக் கண்ணனே கண்ணுறங்கு.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment