About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 11 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 111

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 81

தேஜோ வ்ருஸோ² த்³யுதி தரஸ் 
ஸர்வ ஸ²ஸ்த்ர ப்ருதாம் வர:|
ப்ரக்³ரஹோ நிக்³ரஹோ வ்யக்³ரோ 
நைக ஸ்²ருங்கோ³ க³தா³க்³ரஜ:||

  • 763. தேஜோ வ்ருஸோ² - ஒளியைப் பொழிபவர். நல்ல உள்ளம் கொண்டவர்களின் பாதுகாப்பு வடிவில் மகிமையையும் அருளையும் பொழிகிறார். பக்தர்களைப் பாதுகாப்பவர். சூரியனின் ஊடாக பூமியில் மழை பொழியச் செய்கிறார். 
  • 764. த்³யுதி தரஸ் - ஒளி வீசும் அங்கங்களை உடையவர்.  புத்திசாலித்தனமாகவும் பிரகாசமாகவும் இருக்கிறார்.
  • 765. ஸர்வ ஸ²ஸ்த்ர ப்ருதாம் வரஹ - ஆயுத பாணிகளில் மிகவும் சிறந்தவர். ஆயுதம் ஏந்துபவர்களில் சிறந்தவர்.
  • 766. ப்ரக்³ரஹோ - அடக்கி நடத்துபவர். கட்டுப்படுத்துபவர். தனது பக்தர்கள் அளிக்கும் மலர்கள், இலைகள் போன்ற எந்தவொரு பிரசாதத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார்.
  • 767. நிக்³ரஹோ - எதிரிகளை மாளச் செய்பவர். அனைத்து படைப்புகளின் மீதும் அவருக்கு உறுதியான கட்டுப்பாடு உள்ளது.
  • 768. வ்யக்³ரோ - பகைவரை அழிப்பதில் பரபரப்புள்ளவர். முடிவில்லாதவர். முடிவில்லாதவர். அழியாதவர். நித்யமானவர். அவர் தனது பக்தர்களின் மீது பொழியும் அவரது அருளுக்கு முடிவே இல்லை.
  • 769. நைக ஸ்²ருங்கோ³ - பல்வேறு உபாயங்களால் பகைவரை அழித்தவர். தனது பக்தர்களின் எதிரிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு யுக்திகளைக் கையாள்கிறார். அவரிடம் நான்கு சிகரங்கள், வேதங்கள் உள்ளன.
  • 770. க³தா³க்³ரஜஹ - கதன் என்பவருக்கு முன் பிறந்தவர். மந்திரம் அல்லது பிரார்த்தனையின் போது அவர் வெளிப்படுகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.48

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.48
 
யோக³ஸ்த²: குரு கர்மாணி 
ஸங்க³ம் த்யக்த்வா த⁴நஞ்ஜய|
ஸித்³த்⁴ய ஸித்³த்⁴யோ: ஸமோ பூ⁴த்வா 
ஸமத்வம் யோக³ உச்யதே||

  • யோக³ஸ்  த²ஹ் - யோகத்தில் நிலைபெற்று 
  • குரு - செயலாற்று 
  • கர்மாணி - உன்னுடைய கடமைகள் 
  • ஸங்க³ம் - பற்றுதல் 
  • த்யக்த்வா - கைவிட்டு 
  • த⁴நஞ்ஜய - அர்ஜுநனே
  • ஸித்³தி⁴ - வெற்றி 
  • அஸித்³த⁴யோஹோ - தோல்வியில் 
  • ஸமோ - சமமாக 
  • பூ⁴த்வா - ஆகி 
  • ஸமத்வம் - நடுநிலையே 
  • யோக³ - யோகம் 
  • உச்யதே - கூறப்படுகின்றது

தனஞ்ஜயனே, வெற்றி தோல்வியில் பற்றுதலை கைவிட்டு, யோகத்தில் நிலைபெற்று உன்னுடைய கடமைகளை, சம நிலையுடன் செயலாற்று. இந்த சமத்துவமே யோகம் என்று கூறப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.1

வ்யாஸ உவாச
இதி ப்³ருவாணம் ஸம்ஸ் தூய 
முநீநாம் தீ³ர்க⁴ ஸத்ரிணாம்|
வ்ருத்³த:⁴ குலபதி: ஸூதம் 
ப³ஹ் வ்ருச: ஸொ²நகோ ப்³ரவீத்||

  • வ்யாஸ உவாச - வ்யாஸர் கூறுகிறார் 
  • இதி ப்³ருவாணம் - இவ்வாறு சொல்லிய
  • ஸூதம் - ஸூத மஹரிஷியை
  • ஸம்ஸ் தூய - ஸ்தோத்திரங்கள் செய்து
  • ப³ஹ் வ்ருசஸ் - ரிக்வேதியும்
  • தீ³ர்க⁴ ஸத்ரிணாம் - தீர்க்க ஸத்ரம் என்ற யாகம் செய்த 
  • முநீநாம் - மஹரிஷிகளுக்கு எல்லாம்
  • குலபதிஸ் - முக்கியமானவரும்
  • வ்ருத்³த⁴ஹ் -  பெரியோராயும் உள்ள
  • ஸொ²நக - சௌநகர் என்றவர்
  • ப்³ரவீத் - சொன்னார்

வியாசர் கூறுகிறார் - ஆயிரம் வருடம் வரையில் செய்யப்படும் 'ஸத்ரம்' என்னும் வேள்வியை செய்து கொண்டிருக்கும் முனிவர்களுள் குலபதியாய் விளங்குபவரும்,  ஞானத்தில்  தலைசிறந்தவரும், ருக்வேதம் அத்யயனம் (மறையோதுதல்) செய்தவருமாகிய சௌனக முனிவர், ஸூத புராணிகர் சொன்னதைக் கேட்டு, அவரை வாழ்த்தி  பின்வருமாறு கூறலானார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.46

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.46

தேந தத்ரைவ வஸதா 
ஜநஸ் தா²ந நிவாஸிநீ|
விரூ பிதா ஸூ²ர்பணகா² 
ராக்ஷஸீ காம ரூபிணீ|| 

  • தத்ர - அங்கே
  • வஸதா - வஸிக்கிறவரான
  • தேந -  அவராலே
  • ஜநஸ் தா²ந -  ஜனஸ்தானம் என்னும் காட்டில்
  • நிவாஸிநீ - வஸிப்பவளான
  • காம ரூபிணீ - வேண்டியபடி வடிவம் கொள்ள வல்லவளான
  • ஸூ²ர்பணகா² - சூர்ப்பணகை என்கிற
  • ராக்ஷஸீ -  இராக்ஷஸீ
  • விரூ பிதா - அங்க பங்கம் மட்டும்
  • ஏவ - பண்ணப் பட்டாள்

இராமர் அங்கே வசித்து வந்த போது,  தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியான ஜனஸ்தானம் என்னும் காட்டில் வசிப்பவளும், விரும்பிய வடிவை ஏற்கவல்ல காமரூபிணியும், இராக்ஷசியுமான சூர்ப்பணகை அவனால் வடிவம் குலைக்கப் பட்டாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 90 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 90 - கரு மலைக் குட்டன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்* 
மொடு மொடு விரைந்தோடப்* 
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன்* 
பெயர்ந்தடியிடுவது போல்* 
பன்னி உலகம் பரவியோவாப்* 
புகழ்ப் பல தேவனென்னும்* 
தன் நம்பியோடப் பின் கூடச் செல்வான்* 
தளர் நடை நடவானோ!

  • முன் - முன்னே
  • நல் - அழகிய
  • ஓர் - ஒப்பற்ற
  • வெள்ளி பெரு மலை - பெரிய வெள்ளி மலை பெற்ற (ஈன்ற)
  • குட்டன் - குட்டி
  • மொடு மொடு - திடு திடு என்று
  • விரைந்து - வேகமாக
  • ஓட - ஓடிக் கொண்டிருக்க
  • பின்னை - அந்தப் பிள்ளையின் பின்னே தன் செருக்காலே அப் பிள்ளையைப் பிடிப்பதற்காக
  • தொடர்ந்தது - தொடர்ந்து ஓடிய 
  • ஓர் - ஓர் ஒப்பற்ற
  • கரு மலை - கரு நிறமான மலை பெற்ற (ஈன்ற)
  • குட்டன் - குட்டி போல்
  • பெயர்ந்து - தானிருக்கு ம் இடத்தை விட்டுப் புறப்பட்டு
  • அடி இடுவது போல் - அடியிட்டு நகர்ந்து ஓடுவது போல
  • உலகம் - உலகம் அனைத்தும் சேர்ந்து
  • பன்னி - தங்களாலான வரையிலும் ஆராய்ந்து
  • பரவி - ஸ்தோத்ரம் செய்தும் (துதித்தும்)
  • ஓவா - முடிவு காண முடியாத
  • புகழ் - கீர்த்தியை உடைய
  • பலதேவன் என்னும் - பலராமன் என்கிற
  • தன் நம்பி ஓட - தன்னுடைய தமையன் முன்னே ஓடிக் கொண்டிருக்க
  • பின் கூட செல்வான்- அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன் பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான் 
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

உலகங்களெல்லாம் அளவிட முடியாதபடி கீர்த்தியுள்ள தன்னுடைய அண்ணனான பலராமன் தட தட வென்ற சப்தத்துடன் மிக விரைவாக ஓட, அவனைப் பிடிக்க கண்ணன் ஓடுகிறான். இது எப்படியிருக்கிறதென்றால் ஒரு அழகான பெரிய வெள்ளி நிறமுடைய மலையின் குட்டி பாறை முன்னால் இடம் பெயர்ந்து உருண்டு ஓட அதைத் தொடர்ந்து பின்னால் ஒரு நிகரில்லா கரு மலையின் குட்டி பாறை உருண்டு ஓடுவதைப் போலுள்ளதாம்! இப்படியாக ஓடும் கண்ணன் தளர் நடையாக நடந்து வருவானோ என ஏக்கத்துடன் இருக்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 026 - திரு இந்தளூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

026. திருஇந்தளூர் (மாயவரம்)
இருபத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 11 பாசுரங்கள் 

1. திருமங்கையாழ்வார் - 11 பாசுரங்கள்       
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் – 1328 - 1337 - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 10 பாசுரங்கள்   

2. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் – 2779 - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (67) - 1 பாசுரம்                       

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

நாடுதும் வா நெஞ்சமே நாராயணன் பதிகள்*
கூடுதும் வா மெய்யடியார் கூட்டங்கள் சூடுதும் வா*
வீதி யிந்தளத்த கிலின் வீசு புகை வாசம் எழும்*
ஆதி இந்தளூரான் அடி*

  • நெஞ்சமே - எனது மனமே!
  • நாராயணன் பதிகள் - திருமாலினது திருப்பதிகளை
  • நாடுதும் - சென்று தரிசிப்போம் வா
  • மெய் அடியார் கூட்டங்கள் - உண்மையான பக்தர்களது கூட்டங்களை
  • கூடுதும் - போய்ச் சேருவோம் வா
  • இந்தளத்து - தூபக்கால்களில் போடப்பட்ட
  • அகிலின் - அகிற்கட்டைகளினின்று
  • வீசு - வீசுகின்ற
  • புகை - புகையினது
  • வாசம் - நறுமணமானது
  • வீதி - தெருக்களில்
  • எழும் - கமழ்ந்து எழப் பெற்ற
  • ஆதி இந்தளூரான் - முதன்மையாகிய திரு இந்தளூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ள எம்பெருமானது
  • அடி - திருவடித் தாமரைகளை
  • சூடுதும் - தலைமேற் சூடிக் கொள்ளுவோம் வா

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 102

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்|

அர்ஜுனன் ஆச்சரியத்தோடு பார்த்தான். ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு ஸ்ரீமகாவிஷ்ணு சயனித்திருந்தார். அவருடைய உடல் பிரகாசித்தது. அவர் நீல நிறமாக இருந்தார். மஞ்சள் பட்டாடை அணிந்திருந்தார். அவருடைய முகம் பிரசன்னமாக இருந்தது. அவருக்கு அழகிய நீண்ட கண்கள் இருந்தன. கிருஷ்ணர் மகாவிஷ்ணுவை மிக்க மரியாதையுடன் வணங்கினார். அர்ஜுனனும் அவர்முன் கீழே விழுந்து வணங்கினான். 


இருவரும் கைகளைக் கூப்பியபடி மகாவிஷ்ணுவின் முன்னால் நின்றார்கள். முகத்தில் புன்முறுவல் தவழ, மகாவிஷ்ணு அவர்களைப் பார்த்து, "அர்ஜுனா! நீங்கள் என் தேகத்தின் அம்சங்கள். கிருஷ்ணா! நீ ஏன் மறு உருவமே. நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் உலகில் பிறந்து இருக்கிறீர்கள். உங்கள் இருவரையும் இங்கே கொண்டு வருவதற்காகத் தான் நான் இப்படிச் செய்தேன். அந்தணரின் குழந்தைகள் இங்கேதான் உள்ளன. எடுத்துச் செல்லுங்கள்" என்றார். 

மகாவிஷ்ணுவின் வார்த்தைகளைக் கேட்ட இருவரும் அவரைத் திரும்பத் திரும்ப வணங்கினார்கள். அந்தணரின் குழந்தைகளை விஷ்ணு கொடுக்க, குழந்தைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் பூலோகம் திரும்பினார்கள். 

குழந்தைகளைத் திரும்பப் பெற்றதும் அந்தணர் அடைந்த சந்தோஷம் சொல்ல முடியாது. அர்ஜுனன் தன்னுடைய பராக்கிரமம், காண்டீவம், பாணங்கள் ஆகியவை எல்லாம் கிருஷ்ணரின் அருள் இல்லாவிட்டால் ஒன்றும் இல்லை என்று அறிந்து கொண்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 55

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பகவானின் விசித்ர லீலைகள்

ஸ்கந்தம் 03

உத்தவர் தொடர்ந்தார். "பகவான் என்னை பதரிகாஸ்ரமம் செல்லக் கட்டளையிட்டார். நான் அவரைப் பிரிய மனமின்றிப் பின் தொடர்ந்தேன். பகவான் க்ருஷ்ணன் அழகோ அழகு. அனைத்திற்கும் பற்றுக் கோடு. அழகிற்கு அழகு சேர்க்கும் அழகரான அவர் ஸரஸ்வதி நதிக்கரையில் ஒரு அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார். தாமரை போன்ற தன் திருவடியைத் தன் தொடை மேல் வைத்திருந்தார். ஆனந்தமே வடிவெடுத்து போல் காணப்பட்டார். அப்போது மைத்ரேய மஹரிஷி தற்செயலாய் அங்கு வந்தார். அவர் பராசர முனிவரின் சீடர். குரு புத்ரரான வியாசரின் உற்ற தோழர். பகவானின் பரம பக்தர். சித்தர். அவரைக் கண்டதும், இவரது கனிந்த பார்வையும், புன்சிரிப்பும் கண்டு “என் சோர்வெல்லாம் தீர்ந்தது” என்று பகவான் என்னிடம் கூறினார்.


பகவான் மேலும் சொன்னார். “உத்தவா, யாராலும் அடைய முடியாததை உனக்கு அளிக்கப் போகிறேன். முற்பிறவியில் நீ அஷ்ட வசுக்களுள் ஒருவன். முன்பு ப்ரஜாபதிகளும், வசுக்களும் சேர்ந்து ஒரு வேள்வி இயற்றினர். அப்போது நீ என்னையே அடைய வேண்டும் என்ற ஒரே விருப்பத்தோடு என்னைப் பூஜித்தாய். நீ பரம சாது. என் பரிபூரணமான அருள் பெற்ற உனக்கு இஃதே கடைசிப் பிறவி. நான் இப்போது உடலைத் துறந்து வைகுண்டம் செல்லப் போகிறேன். உன் பக்தியால் நீ தனித்திருக்கும் என்னை தரிசித்து விட்டாய். முன்பு பாத்ம கல்பத்தில் படைப்பின் தொடக்கத்தில் என் தொப்புள் கொடியில் இருந்து தோன்றிய ப்ரும்மாவுக்கு என் திருவிளையாடல்கள் பற்றியும், என்னைப் பற்றியும் கூறினேன். ஞானத்தை வழங்கும் அதை ஞானிகள் பாகவதம் என்கின்றனர். அதை இப்போது உனக்குத் தரப் போகிறேன்.” (அதுவே உத்தவ கீதையாகும். பதினோராம் ஸ்கந்தத்தில் விரிவாகக் கூறப்படுகிறது.) விதுரரே! பகவானுக்கு என் மீது எவ்வளவு கருணை பார்த்தீரா!"

“இதைக் கேட்டு என் மேனி சிலிர்த்தது. ஆனந்தக் கண்ணீர் பெருகியது. இரு கரங்களையும் கூப்பி அஞ்சலி செலுத்தினேன். இறைவா! தங்கள் திருவடிகளை சேவிப்பவர்களுக்கு நான்கு பெரும் பேறுகளும் கிட்டுகின்றன. ஆனால் பிச்சைப் பொருளான அவற்றின் மீது எனக்கு இச்சையில்லை. தங்கள் திருவடிக் கமலங்களை சேவிப்பதொன்றே எனக்கு மகிழ்ச்சி. தங்களுக்கென்று விருப்பங்கள் இல்லை. செயல்களும் இல்லை. ஆனால், பற்பல செயல்களை எங்களுக்காக நிகழ்த்துகிறீர். எங்களுக்காகப் பிறக்கிறீர். காலகாலனான தாங்கள் பகைவர்க்கு பயந்தவர் போல் ஓடுகிறீர். நீர் ஆத்மா ராமன். தங்களை மகிழ்விக்க வேறு சாதனம் தேவையில்லை. ஆனால் 16000 பெண்களைத் திருமணம் செய்து திருவிளையாடல் புரிந்தீர். விசித்ரமான உங்கள் திருவிளையாடல் யாருக்கும் புரிவதில்லை. தங்களுடைய அறிவு என்றுமே மழுங்காதது. ஆழ்ந்து அகன்றது. குறைவற்றது. ஆனால், ஏதுமறியாதவர் போல் மந்திர ஆலோசனையில் என்னையும் அழைத்து என் அபிப்ராயம் கேட்பீர். அது என்னை என்னவோ செய்கிறது. ப்ரும்ம தேவருக்குத் தாங்கள் உபதேசித்த பாகவதத்தை அறிந்து கொள்ள எனக்குச் சக்தியும் தகுதியும் இருக்குமானால் எனக்குச் சொல்லுங்கள். நான் சிரமமின்றி சம்சாரக் கடலைக் கடப்பேன்.

இவ்வாறு நான் வணங்கி வேண்ட பகவான் எனக்கு நல்லுபதேசம் செய்தார். அவரை வலம் வந்து வணங்கி, இன்று அவரைப் பிரிந்த வருத்தத்தோடு உம்மைச் சந்தித்தேன். கண்ணனைக் கண்ட மகிழ்ச்சி ஒரு புறம். பிரிவுத் துயர் ஒரு புறம். நான் பத்ரிகாஸ்ரமம் கிளம்புகிறேன்” என்றார்.

விதுரர், தாங்கவொணாத துக்கச் செய்தியைக் கேட்டும் தன் ஞானத்தால் பொறுத்துக் கொண்டார். வணக்கமாக உத்தவரிடம் கேட்டார்.

“பகவான் தங்களுக்குச் சொன்ன நல்லுபதேசத்தை எனக்குச் சொல்ல வேண்டும். பகவானைப் பற்றிய உண்மை அறிவைப் புகட்ட தம்மைப் போன்ற அடியார்களால் தான் முடியும். அதற்காகத் தானே அடியார்கள் உலகெங்கும் சுற்றி வருகின்றனர்.”

உத்தவர் பதிலுரைத்தார். “விதுரரே, பகவான் எனக்குக் கூறியவற்றை அப்போது அங்கிருந்த மைத்ரேய மகரிஷியும் கேட்டார். அவற்றை தங்களுக்குச் சொல்லும்படி மைத்ரேயருக்கு என் எதிரில் தான் கட்டளையிட்டார். ஆகவே, நீங்கள் மைத்ரேய மஹரிஷியைக் கண்டு அவ்விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லிப் புறப்பட்டார்.

விதுரர் துள்ளிக் குதித்தார்.

அனைவரும் தாம் உடலை விடும் நேரம் பகவானை ஸ்மரிக்க விரும்புவர். ஆஹா! பகவானுக்கு ஏழையான என் மேல் எவ்வளவு கருணை. அவர் உடலை விடும் சமயம் என் பெயரைச் சொன்னாரே. 

ஒரு பக்கம் பகவான் கிளம்பிய துக்கம். இன்னொரு புறம் பகவான் தன்னை மறவாமல் நினைத்தானே என்ற ஆனந்தம். தவித்துக் கொண்டு ஒருவாறாக யமுனைக் கரையிலிருந்து புறப்பட்டு மைத்ரேயர் வாசம் செய்யும் கங்கைக் கரையை நோக்கி நடந்தார் விதுரர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 110

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 80

அமாநீ மாநதோ³ மாந்யோ 
லோக ஸ்வாமீ த்ரிலோக த்⁴ருத்:|
ஸுமேதா⁴ மேத⁴ஜோ த⁴ந்யஸ் 
ஸத்ய மேதா⁴ த⁴ராத⁴ர:||

  • 753. அமாநீ - பெருமை இல்லாதவர். சுயத்தின் மீதான பற்றுதல் இல்லாதவர்.
  • 754. மாநதோ³ - கௌரவம் அளிப்பவர். மற்றவர்களை மதிக்கிறவர். தனது பக்தர்களுக்கு வெகுமதிகளை வழங்குகிறார். அநீதியானவர்களுக்கு வெகுமதிகளை மறுக்கிறார். உண்மையான தேடுபவர்களிடம் ஆத்மா பற்றிய தவறான புரிதலை நீக்குகிறார். தேடாதவர்களிடம் ஆத்மாவின் தவறான உணர்வைத் தூண்டுகிறார். தனது பக்தர்களுக்கு ஆன்மீக ஞானத்தை அளிக்கிறார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் ஒரு அளவையும் பரிமாணத்தையும் தருகிறார்.
  • 755. மாந்யோ - பரிசளிக்கத் தக்கவர். பக்தர்களிடம் பரிவுள்ளவர். 
  • 756. லோக ஸ்வாமீ - உலகங்களுக்கெல்லாம் தலைவர்.
  • 757. த்ரிலோக த்⁴ருத்து - மூவுலகங்களையும் தரிப்பவர்.
  • 758. ஸுமேதா⁴ - நல்ல எண்ணம் உடையவர். உயர்ந்த புத்திசாலி.
  • 759. மேத⁴ஜோ - நோன்பு இருப்பதன் பயனாகப் பிறப்பவர். யாகம் செய்யும் போதெல்லாம் அவர் தன்னை வெளிப்படுத்துகிறார்.
  • 760. த⁴ந்யஸ் - பாக்கியவான். ஆசீர்வதிக்கப்பட்டவர். தனது எல்லா நோக்கங்களையும் நிறைவேற்றிவிட்டார். 
  • 761. ஸத்ய மேதா⁴ - உண்மையான எண்ணமுடையவர். நேர்மையானவர். நேரடியானவர். புத்தி எப்பொழுதும் குறைவில்லாதவர்.  அவருடைய ஞானம் எப்போதும் அவரை விட்டு விலகாது. 
  • 762. த⁴ராத⁴ரஹ - குன்றம் ஏந்தியவர். பூமியை ஆதரிப்பவர். அவரது உள்ளார்ந்த கூறுகளைப் பயன்படுத்தி பூமியைச் சுமந்து செல்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.47

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.47 

கர்மண்யே வாதி⁴ கா ரஸ்தே 
மா ப²லேஷு கதா³ சந|
மா கர்ம ப²லஹேதுர் பூ⁴ர்
மா தே ஸங்கோ³ அஸ்த்வ கர்மணி||

  • கர்மணி - விதிக்கப்பட்ட கடமைகளில் 
  • ஏவ - நிச்சயமக 
  • அதி⁴கார - அதிகாரம் 
  • தே - உனக்கு 
  • மா - என்றுமில்லை 
  • ப²லேஷு - பலன்களில் 
  • கதா³சந - எப்போதுமே 
  • மா - என்றுமில்லை 
  • கர்ம ப²ல - செயல்களின் பலன்களில் 
  • ஹேதுர் - காரணம் 
  • பூ⁴ர் - ஆவது 
  • மா - என்றுமில்லை 
  • தே - உனக்கு 
  • ஸங்கோ³ - பற்றுதல் 
  • அஸ்துவ் - இருப்பது 
  • அகர்மணி - விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல்

எவ்வேளையிலும், விதிக்கப்பட்ட கடமைகளில், பலன்களில் உனக்கு என்றும் அதிகாரம் இல்லை. விதிக்கப்பட்ட கடமைகளை செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு, பயனைக் கோருபவனாக ஆகாதே. கடமைகளை செய்யாமலும் இருக்காதே. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.45

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.45

அஹம் சாத்⁴ய க³மம் தத்ர 
நிவிஷ்டஸ் தத³ நுக்³ர ஹாத்|
ஸோ ஹம் வ: ஸ்²ரா வயிஷ் யாமி 
யதா² தீ⁴தம் யதா² மதி||

  • தத்ர -  அதே  சபையில்
  • ச அஹம் -  அப்படிப்பட்ட நான்
  • யதா² தீ⁴தம் - எவ்வாறு அறிந்தேனோ
  • யதா² மதி - என் புத்திக்கு ஏற்றவாறு
  • வஸ் -   உங்களையும்
  • ஸ்²ரா வயிஷ் யாமி -  கேட்கும்படி செய்கிறேன்
  • நிவிஷ்டஸ் - உட்கார்ந்து கொண்டு
  • அஹம் ச -  நானும்
  • தத³ நுக்³ர ஹாத்து -  அவரது அனுக்ரகத்தால்
  • அத்⁴ய க³மம் -  அறிந்தவனாய் இருக்கிறேன்

அங்கு சென்றிருந்த நானும் அவருடைய அருளினால் தெரிந்து கொண்டேன். நான் தெரிந்து கொண்டதை, என் புத்திக்கு ஏற்றவாறு உங்களுக்குச் சொல்கிறேன்.

ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், முதலாவது ஸ்கந்தத்தில் 
மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

||இதி ஸ்ரீமத்³ பா⁴க³வதே மஹாபுராணே பாரம ஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம்
ப்ரத²ம ஸ்கந்தே⁴ நைமிஷீயோ பாக்²யாநே த்ருதீயோ அத்⁴யாய:||  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்