About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 11 February 2024

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.47

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.47 

கர்மண்யே வாதி⁴ கா ரஸ்தே 
மா ப²லேஷு கதா³ சந|
மா கர்ம ப²லஹேதுர் பூ⁴ர்
மா தே ஸங்கோ³ அஸ்த்வ கர்மணி||

  • கர்மணி - விதிக்கப்பட்ட கடமைகளில் 
  • ஏவ - நிச்சயமக 
  • அதி⁴கார - அதிகாரம் 
  • தே - உனக்கு 
  • மா - என்றுமில்லை 
  • ப²லேஷு - பலன்களில் 
  • கதா³சந - எப்போதுமே 
  • மா - என்றுமில்லை 
  • கர்ம ப²ல - செயல்களின் பலன்களில் 
  • ஹேதுர் - காரணம் 
  • பூ⁴ர் - ஆவது 
  • மா - என்றுமில்லை 
  • தே - உனக்கு 
  • ஸங்கோ³ - பற்றுதல் 
  • அஸ்துவ் - இருப்பது 
  • அகர்மணி - விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல்

எவ்வேளையிலும், விதிக்கப்பட்ட கடமைகளில், பலன்களில் உனக்கு என்றும் அதிகாரம் இல்லை. விதிக்கப்பட்ட கடமைகளை செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு, பயனைக் கோருபவனாக ஆகாதே. கடமைகளை செய்யாமலும் இருக்காதே. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment