||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
026. திருஇந்தளூர் (மாயவரம்)
இருபத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 11 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 11 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் – 1328 - 1337 - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 10 பாசுரங்கள்
2. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் – 2779 - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (67) - 1 பாசுரம்
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
நாடுதும் வா நெஞ்சமே நாராயணன் பதிகள்*
கூடுதும் வா மெய்யடியார் கூட்டங்கள் சூடுதும் வா*
வீதி யிந்தளத்த கிலின் வீசு புகை வாசம் எழும்*
ஆதி இந்தளூரான் அடி*
- நெஞ்சமே - எனது மனமே!
- நாராயணன் பதிகள் - திருமாலினது திருப்பதிகளை
- நாடுதும் - சென்று தரிசிப்போம் வா
- மெய் அடியார் கூட்டங்கள் - உண்மையான பக்தர்களது கூட்டங்களை
- கூடுதும் - போய்ச் சேருவோம் வா
- இந்தளத்து - தூபக்கால்களில் போடப்பட்ட
- அகிலின் - அகிற்கட்டைகளினின்று
- வீசு - வீசுகின்ற
- புகை - புகையினது
- வாசம் - நறுமணமானது
- வீதி - தெருக்களில்
- எழும் - கமழ்ந்து எழப் பெற்ற
- ஆதி இந்தளூரான் - முதன்மையாகிய திரு இந்தளூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ள எம்பெருமானது
- அடி - திருவடித் தாமரைகளை
- சூடுதும் - தலைமேற் சூடிக் கொள்ளுவோம் வா
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment