About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 11 February 2024

108 திவ்ய தேசங்கள் - 026 - திரு இந்தளூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

026. திருஇந்தளூர் (மாயவரம்)
இருபத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 11 பாசுரங்கள் 

1. திருமங்கையாழ்வார் - 11 பாசுரங்கள்       
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் – 1328 - 1337 - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 10 பாசுரங்கள்   

2. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் – 2779 - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (67) - 1 பாசுரம்                       

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

நாடுதும் வா நெஞ்சமே நாராயணன் பதிகள்*
கூடுதும் வா மெய்யடியார் கூட்டங்கள் சூடுதும் வா*
வீதி யிந்தளத்த கிலின் வீசு புகை வாசம் எழும்*
ஆதி இந்தளூரான் அடி*

  • நெஞ்சமே - எனது மனமே!
  • நாராயணன் பதிகள் - திருமாலினது திருப்பதிகளை
  • நாடுதும் - சென்று தரிசிப்போம் வா
  • மெய் அடியார் கூட்டங்கள் - உண்மையான பக்தர்களது கூட்டங்களை
  • கூடுதும் - போய்ச் சேருவோம் வா
  • இந்தளத்து - தூபக்கால்களில் போடப்பட்ட
  • அகிலின் - அகிற்கட்டைகளினின்று
  • வீசு - வீசுகின்ற
  • புகை - புகையினது
  • வாசம் - நறுமணமானது
  • வீதி - தெருக்களில்
  • எழும் - கமழ்ந்து எழப் பெற்ற
  • ஆதி இந்தளூரான் - முதன்மையாகிய திரு இந்தளூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ள எம்பெருமானது
  • அடி - திருவடித் தாமரைகளை
  • சூடுதும் - தலைமேற் சூடிக் கொள்ளுவோம் வா

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment