About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 11 February 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.1

வ்யாஸ உவாச
இதி ப்³ருவாணம் ஸம்ஸ் தூய 
முநீநாம் தீ³ர்க⁴ ஸத்ரிணாம்|
வ்ருத்³த:⁴ குலபதி: ஸூதம் 
ப³ஹ் வ்ருச: ஸொ²நகோ ப்³ரவீத்||

  • வ்யாஸ உவாச - வ்யாஸர் கூறுகிறார் 
  • இதி ப்³ருவாணம் - இவ்வாறு சொல்லிய
  • ஸூதம் - ஸூத மஹரிஷியை
  • ஸம்ஸ் தூய - ஸ்தோத்திரங்கள் செய்து
  • ப³ஹ் வ்ருசஸ் - ரிக்வேதியும்
  • தீ³ர்க⁴ ஸத்ரிணாம் - தீர்க்க ஸத்ரம் என்ற யாகம் செய்த 
  • முநீநாம் - மஹரிஷிகளுக்கு எல்லாம்
  • குலபதிஸ் - முக்கியமானவரும்
  • வ்ருத்³த⁴ஹ் -  பெரியோராயும் உள்ள
  • ஸொ²நக - சௌநகர் என்றவர்
  • ப்³ரவீத் - சொன்னார்

வியாசர் கூறுகிறார் - ஆயிரம் வருடம் வரையில் செய்யப்படும் 'ஸத்ரம்' என்னும் வேள்வியை செய்து கொண்டிருக்கும் முனிவர்களுள் குலபதியாய் விளங்குபவரும்,  ஞானத்தில்  தலைசிறந்தவரும், ருக்வேதம் அத்யயனம் (மறையோதுதல்) செய்தவருமாகிய சௌனக முனிவர், ஸூத புராணிகர் சொன்னதைக் கேட்டு, அவரை வாழ்த்தி  பின்வருமாறு கூறலானார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment