About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 5 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 71

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 41

உத்³ப⁴வ: க்ஷோப⁴ணோ தே³வ:
ஸ்ரீ க³ர்ப⁴: பரமேஸ்²வர:|
கரணம் காரணம் கர்த்தா
விகர்த்தா க³ஹநோ கு³ஹ:||

  • 374. உத்³ப⁴வஸ்² - பந்தத்தை விலக்குபவன்.
  • 375. ஷோப⁴ணோ - படைக்குங் காலத்தில் கலக்குபவன்.
  • 376. தே³வஸ்² - விளையாடுபவன்.
  • 377. ஸ்ரீ க³ர்ப⁴ஃ - திருமகளைப் பிரியாதவன்.
  • 378. பரமேஸ்²வரஹ| - பெரிய மேன்மையை உடையவன்.
  • 379. கரணம் - உபாயமாயிருப்பவன்.
  • 380. காரணம் - இயக்குபவன்.
  • 381. கர்த்தா - செயல்படுபவன்.
  • 382. விகர்த்தா - மாறுதல் அடைபவன்.
  • 383. கஹநோ - அறிவுக் கெட்டாதவன்.
  • 384. குஹஹ - காப்பாற்றுபவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.8 

ந ஹி ப்ரபஸ்²யாமி மமா பநுத்³யாத்³
யச் சோ²க முச்சோ²ஷண மிந்த்³ரியாணாம்|
அவாப்ய பூ⁴மா வஸபத்நம் ருத்³த⁴ம் 
ராஜ்யம் ஸுராணா மபி சாதி⁴ பத்யம்||

  • ந - இல்லை 
  • ஹி - நிச்சயமாக 
  • ப்ரபஸ்²யாமி - காண்பது 
  • மம - என்னுடைய 
  • அபநுத்³யாத் - தீர்க்க கூடியது 
  • யத் - எதுவோ அதை 
  • சோ²கம் - சோகம் 
  • உச்சோ²ஷணம் - வறட்டும் 
  • இந்த்³ரியாணாம் - புலன்களில் 
  • அவாப்ய - பெற்று 
  • பூ⁴மௌ - பூமியில் 
  • அஸபத்நம் - எதிரிகளற்று 
  • ருத்³த⁴ம் - செழிப்பான
  • ராஜ்யம் - ராஜ்ஜியம் 
  • ஸுராணாம் - தேவர்களில் 
  • அபி - கூட 
  • ச - மேலும் 
  • அதி⁴பத்யம் - அதிபதியாக

தேவர்களில் அதிபதியாக, பூமியில் எதிரிகளற்று வளமான ராஜ்ஜியத்தை பெற்றால் கூட, புலன்களை வறட்டுகின்ற என்னுடைய சோகத்தை, தீர்க்கக் கூடியது எதுவோ அதை, என்னால் காண முடியவில்லை. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.6

ஸ ஏவ ப்ரத²மம் தே³வ: 
கௌமாரம் ஸர்க³ மாஸ்²ரித:|
சசார து³ஸ்²சரம் ப்³ரஹ்மா 
ப்³ரஹ்ம சர்யம் அக²ண்டி³தம்||

  • ஸ - அப்படிப்பட்டவரான
  • தே³வஹ ஏவ - பரம புருஷரே
  • ப்ரத²மம் கௌமாரம் ஸர்க³ம் - முதலில் கௌமார ரூபமான அவதாரத்தை
  • ஆஸ்²ரிதஹ - எடுத்தவராய்
  • ப்³ரஹ்மா - பிராமணராக பாவித்து
  • து³ஸ்²சரம் - மிகக் கடுமையானதும்
  • அக²ண்டி³தம் - இடைவிடாததும் ஆன
  • ப்³ரஹ்ம சர்யம் - பிரம்மசர்யத்தை 
  • சசார - அநுஷ்டித்தார்

விராட் புருஷரான பகவான் வாசுதேவனே முதலில் (ஸநத்குமாரர் முதலிய) கௌமார அவதாரத்தை மேற்கொண்டு, அந்தணமையைக் கைக்கொண்டு, ஒருவராலும் பின்பற்றுவதற்கு அரியதான பிரும்மசரிய விரதத்தை இடைவிடாது கடைப்பிடித்து ஒழுகினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.6

ஸ்²ருத்வா சைதத் த்ரிலோக ஜ்ஞோ 
வால்மீகேர் நாரதோ³ வச:।
ஸ்²ரூய தாமிதி சாமந்த்ர்ய 
ப்ரஹ் ருஷ்டோ வாக்யம் அப்³ரவீத்॥ 

  • வால்மீகேர் - வால்மீகியினுடைய
  • ஏதத் -   இந்த
  • வசஹ -  வார்த்தையை
  • ஸ்²ருத்வா -  கேட்டு
  • த்ரிலோக ஜ்ஞோ - மூன்று உலகங்களின் பரிச்சயம் உள்ள
  • நாரதோ³ -  நாரதர்
  • ப்ரஹ் ருஷ்டோ - வெகு சந்தோசம் அடைந்தவராய்
  • ச ச -  அந்த க்ஷணமே
  • ஸ்²ரூய தாம் - கவனமாய் செவி கொடுக்கப்படட்டும்
  • இதி - என்று
  • ஆமந்த்ர்ய - சொல்லி
  • வாக்யம் - மறு மொழியை
  • அப்³ரவீத் - உரைத்தார்

மூவுலகங்களையும் அறிந்த நாரதர், வால்மீகியின் சொற்கள் அனைத்தையும் கேட்டு, "கேட்பீராக" என்று சொல்லி,  தன் சொல்லால் வால்மீகியைக் கவர்ந்து இழுத்து, மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார் நாரதர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1 - 4 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி  - 10 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 54 – 63

சந்திரனை அழைத்தல், அம்புலிப் பருவம்

குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்

கலிநிலைத்துறை

கண்ணன் வளர்ந்து தவழ்கிறான். திறந்த வெளியில் வருகிறான். வெண்ணிலவு! சந்திரனைப் பார்க்கிறான். தன்னோடு விளையாட வருவான் என்று நினைக்கிறான். ஆனால் சந்திரன் வான வீதியில் வேகமாக செல்கிறான்.


கண்ணன் தன் சிறு கைகளால் சந்திரனை காட்டி அழைத்தும் சந்திரன் வராததை பார்த்த யசோதை பிராட்டி, சந்திரனை பார்த்து கோபித்துக் கூறும் பாசுரங்கள் தான் இவை. இவனே தெய்வம். இவனை அலட்சியம் செய்தால், நீ தப்ப முடியாது என்று சந்திரனுக்கு கூறி, நமக்கும் உணர்த்துகிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 014 - திருநறையூர் 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 6

திருமங்கையாழ்வார்

101. திவ்ய ப்ரபந்தம் - 1575 - கண்ணனைக் கண்டு விட்டேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர்* 
எமக்கு இம்மையே அருள்பெற்றமையால்* 
அடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்*
தோற்றத் தொல் நெறியை* வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை* 
பத்தர் தாம் நுகர்கின்றது ஓர் கனியை* 
காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை* 
இன்று கண்டு கொண்டேனே|

102. திவ்ய ப்ரபந்தம் - 1576 - என் மனம் திருமாலையே போற்றும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
என் செய்கேன் அடியேன் உரையீர்*
இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்*
தஞ்சை ஆளியைப் பொன்பெயரோன்* 
நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை*
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட*
சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்*
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி* 
என் மனம் போற்றி என்னாதே|

103. திவ்ய ப்ரபந்தம் - 1577 - இவற்றைப் பாடுங்கள்; பாவம் பறந்து விடும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்* தோன்றல் வாள் கலியன்* 
திரு ஆலி நாடன்* நல் நறையூர் நின்ற நம்பி தன்*
நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்* சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்*
தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை*
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர் பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே|

104. திவ்ய ப்ரபந்தம் - 1611 - ஆதி வராகனே! எனக்கு அடைக்கலம் தர யாருமில்லை
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம்
பரனே பஞ்சவன் பௌழியன் சோழன்*
பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும் வரனே* 
மாதவனே மதுசூதா* மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண்*
நரனே நாரணனே திருநறையூர்* நம்பீ எம் பெருமான் உம்பர் ஆளும் அரனே* 
ஆதிவராகம் முன் ஆனாய்* அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|

105. திவ்ய ப்ரபந்தம் - 1659 - என் மகள் நாணத்தைத் துறந்து விட்டாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
நீள் நிலாமுற்றத்து* நின்று இவள் நோக்கினாள்*
காணுமோ* கண்ணபுரம் என்று காட்டினாள்*
பாணனார் திண்ணம் இருக்க* இனி இவள்
நாணுமோ?* நன்று நன்று நறையூரர்க்கே|

106. திவ்ய ப்ரபந்தம் - 1852 - திருநறையூரும் திருமெய்யமும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
சுடலையில்* சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
நடலை தீர்த்தவனை* நறையூர்க் கண்டு* 
என் உடலையுள் புகுந்து* உள்ளம் உருக்கி உண்*
விடலையைச் சென்று காண்டும்* மெய்யத்துள்ளே|

107. திவ்ய ப்ரபந்தம் - 2067 - திருமால் செயல் கூறிக் கண்ணீர் விடுகிறாளே!
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்*
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்*
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும்*
வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்*
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்*
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்*
துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே|

108. திவ்ய ப்ரபந்தம் - 2068 - எல்லாத் தலங்களையும் பாடுகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப*
பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று*
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்*
சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து* 
ஆங்கே தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்*
தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு*
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன*
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே|

109. திவ்ய ப்ரபந்தம் - 2706 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் 
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்*
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* 
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்றையே வெஃகாவே*
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்*
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை|

110. திவ்ய ப்ரபந்தம் - 2753 - சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்
பெரிய திருமடல் - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம் 
பாவியேற்கு என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின்*
இரும் பொழில் சூழ் மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்*
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு*
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன்|

111. திவ்ய ப்ரபந்தம் - 2782 - எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் 
மன்னும் மறை நான்கும் ஆனானை* 
புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை*
நாங்கூரில் மன்னு மணிமாடக்கோயில் மணாளனை*
நல் நீர்த் தலைச்சங்க நாள் மதியை* 
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை* 
தென் நறையூர் மன்னு மணிமாடக்கோயில் மணாளனை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 62

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

காலயவனனை கொன்ற முசுகுந்தர்|

காலயவனனை கொன்ற அந்த மனிதர் யார் என்ற கேள்வி இப்பொழுது. அந்த மனிதரின் பெயர் ராஜா முசுகுந்தர். அவர் ஒரு பெரிய அரசர். அதே சமயத்தில் மிகுந்த பக்திமானும் கூட, வேதக் கொள்கைகளைப் பின்பற்றுபவர். அவர் மிகுந்த பலசாலியாக இருந்ததனால், ஒரு சமயம், தமக்கும் மற்ற தேவர்களுக்கும் உதவும்படி இந்திரன் அவரைக் கேட்டுக் கொண்டான். முசுகுந்தர் சரி என்று ஒப்புக் கொண்டு, வெகு காலம் தேவர்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றினார்.


பிறகு சிவகுமாரனான முருகப் பெருமான் தேவர்களின் சேனைத் தலைவர் ஆக்கப்பட்டார். பிறகு இந்திரனும் மற்ற தேவர்களும் முசுகுந்தரை அணுகி, "நண்பரே! தாங்கள் இத்தனைக் காலமும் எங்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றினீர்கள். எங்களுக்காகத் தங்கள் அரசு, உற்றார், உறவினர் எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு வந்தீர்கள். மனித வாழ்க்கை அநித்தியமானதால் தங்கள் குடும்பம், குழந்தைகள், உற்றார், உறவினர் யாரையும் அங்கே காண மாட்டீர்கள். ஆகவே எங்களிடம் ஏதேனும் வரம் கேளுங்கள்" என்று சொன்னார்கள்.

காலம் தன் உற்றார் உறவினர் எல்லோரையும் அழித்து விட்டது என்று கேட்டதும் அவர் திடுக்கிட்டார்! நாம் அத்தனை காலமா தேவர்களுடன் தங்கி விட்டோம் என்று நினைத்தார். ஆகவே பூமிக்குத் திரும்ப அவருக்கு ஆசையில்லை. ஓய்வு ஒழிவின்றி அவர் அசுரர்களோடு போரிட்டிருந்தார். இப்பொழுது மிகவும் அசதியாக இருந்தார். அவருக்கு இப்பொழுது தேவைப்பட்டதெல்லாம் நல்ல உறக்கம் தான்.

ஆகவே அவர், "இதோ பாருங்கள், எனக்கு இப்பொழுது வேண்டியதெல்லாம் நல்ல உறக்கம் தான். யாருடைய குறுக்கீடும் இல்லாமல் நான் நீண்ட காலம் உறங்க வேண்டும் என்று அருள் புரியுங்கள். அதோடு எவன் என் உறக்கத்தை கெடுத்து என்னை எழுப்புகிறானோ அவன் உடனே எரிந்து சாம்பலாகி விட வேண்டும் என்றும் அருள் புரியுங்கள்" என்றார்.

தேவர்கள் இந்த வரத்தை அளித்ததும் ராஜா முசுகுந்தர் இந்த மலைக் குகைக்கு வந்து தூங்க ஆரம்பித்தார். காலயவனன் அவர் தூக்கத்தைக் கெடுத்து எழுப்பியதால், தேவர்களின் வரத்தின்படி அவன் எறிந்து சாம்பலானான். முசுகுந்தர் இப்பொழுது நன்கு விழித்துக் கொண்டார். சிரித்த முகத்துடன் எதிரே கிருஷ்ணன் நிற்பதைப் பார்த்தார்.

கிருஷ்ணனின் இடுப்பில் இருந்த பட்டாடை, மார்பில் இருந்த ஸ்ரீவத்ச அடையாளம், கழுத்தில் இருந்த கௌஸ்துபமணி, இரு காதுகளிலும் தொங்கிய குண்டலங்கள் இவை எல்லாவற்றையும் பார்த்தார். கிருஷ்ணன் இப்பொழுது நான்கு கைகளுடனும், முழங்கால் வரை தொங்கிய துளசிமாலையுடனும் ஸ்ரீமகாவிஷ்ணுவாக அவருக்குக் காட்சியளித்தான். அந்த அழகைக் கண்டு ராஜா பிரமித்தார். இது யாராக இருக்க முடியும்?

உடனே அவர் கிருஷ்ணனைப் பார்த்து "தாங்கள் உலக நாயகன் என்று நான் நினைக்கிறன். ஆ! எனக்கு இப்பொழுது புரிந்து விட்டது. தாங்கள் “ஸ்ரீமந்நாராயணன்”. நான் ஒரு சாதாரண மனிதன். தேவர்களுக்குச் சொற்ப உதவி புரிந்தேன். நான் மிகவும் அசதியாக இருந்தேன். தேவர்கள் நான் விரும்பியவரை என்னைத் தூங்க அனுமதித்தார்கள். நான் முன் பின் அறியாத ஒருவனால் எழுப்பப் பட்டேன். அவன் உடனே சாம்பலாகி விட்டான். அவன் செய்த பாவம் தான் அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். பிறகு ஏன் கண்கள் தங்கள் தெய்விகத் தரிசனத்தைக் கண்டன. தங்களுக்கு ஏன் வணக்கம்" என்று வணங்கினர்.

முசுகுந்தரின் பக்தியைக் கிருஷ்ணன் மெச்சினான். அவன் சிரித்துக் கொண்டே பதில் சொன்னான்.

"நான் யார், ஏன் பெயர் என்ன என்று நீர் தெரிந்துகொள்ள விரும்புகிறீர். என்னுடைய பெயர்கள், நான் எடுத்த பிறவிகள், நான் செய்த காரியங்கள் எத்தனையோ கோடியாகும். அவற்றுக்குத் தொடக்கமும் கிடையாது, முடிவும் கிடையாது. இந்தப் பிறவியில் என் பெயர் கிருஷ்ணன். நான் கம்சனையும் இன்னும் பல அசுரர்களையும் கொன்றேன். உம் விழிகளால் நீர் ஒரு மனிதரை எரித்தீரே, அவன் காலயவனன் என்னும் கொடியவனும் பாவியுமான யவன வீரன். நீர் இங்கே இருப்பது தெரிந்து தான் நான் இங்கே இந்தக் குகைக்கு வந்தேன். நீர் என்றுமே என் பக்தராக இருந்தீர்கள். நீர் வேண்டியதைப் பெரும் காலம் வந்து விட்டது. நீர் கேட்கும் எதையும் நான் கொடுப்பேன். என் பக்தர்கள் ஒரு நாளும் துன்பப்படக் கூடாது".

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறுபத்தி எட்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

068 கள்வன் இவன் என்றேனோ லோக குருவைப் போலே|

"கள்வன்: என்பது ஸ்ரீமன்நாராயணனுக்கு இருக்கும் பல பெயர்களில் ஒன்றாகும் கள்வன். எனில், திருடுவது, ஏமாற்றுவது என்று பொருள். எம்பெருமானின் பக்தர்களின் நலனுக்காக இதையும் செய்வார். அவரது திவ்ய தேசங்களில் ஒன்றில் கள்வன் என்ற பெயரிலேயே காணப்படுகிறார்.


மகாபலி யாக சாலையில் வாமனனாக சிறு உருவில் தோன்றி, மூன்று அடி நிலம் கேட்டு, திருவிக்ரமனாக மாறி, உலகை அளக்கிறார் எம்பெருமான். அந்நேரம் அசுரர்களின் லோக குரு நாராயணனை கள்வன் என்கிறார்.

நம்மாழ்வாரையும் லோக குரு எனலாம். பல பாசுரங்களில் பெருமானை அவர் கள்வன் என் கிறார். திருவாய்மொழியில், "கொள்வான் அவன் மாவலி மூவடி தா என்ற கள்வனே" என்கிறார் (வாமன அவதாரத்தை)

தவிர்த்து, சிவபெருமான் ஒரு சமயம் நாராயணனுக்கு வரம் ஒன்று அளித்திருந்தார். அதை கிருஷ்ண அவதாரத்தில், கைலாயம் சென்று கண்ணன் கேட்கிறான். அனைத்து உலகிற்கும் எம்பெருமானே தந்தை. அவர் சிவனிடம் வரம் கேட்பதைக் கண்ட சிவபெருமான் "கள்வனே" என்கிறார்.

(தவிர்த்து திருவாய் மொழியில் ஒரு பாடல்)

கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ!’ என்று வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே.

பொழிப்புரை: வெண்மை நிறம் பொருந்திய இடபத்தை வாகனமாக டைய சிவனும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும், ‘கள்வனே! எங்களையும் மற்றை உலகங்ளையும் நின்னிடத்தினின்றும் தோன்றச் செய்த இறைவனே!’ என்று, கருட வாகனத்தையுடைய இறைவனுடைய திருவடிகளை வணங்கித் துதிப்பார்கள்

திருமங்கையாழ்வாரும் எம்பெருமானை "கார்வனத்து உள்ளே கள்வா" என்கிறார்

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "இப்படியெல்லாம் லோக குருக்கள் எம்பெருமானை "கள்வன்" என்று அழைத்தாற் போல நான் அழைக்கவில்லையே. இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

வியாஸ நாரத ஸம்வாதம் - 2

ஸ்கந்தம் 01

"பக்தியைத் தூண்டும் கிரந்தமா? ஒருவர் மனத்தில் பக்தியை எப்படித் தூண்ட முடியும்? புரியும் படி சொல்லுங்கள் முனி ஸ்ரேஷ்டரே" குழப்பத்தோடு வினவினார் வியாஸர்.


நாரதர் சொன்னார்,
"காமம், கோபம் பயம், துக்கம் மகிழ்ச்சி என்பது போல் பக்தியும் உணர்வு தானே? ஒரு கல்யாண வீட்டிற்குப் போனால் அங்கு நிலவும் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ஒரு துக்கம் நடந்த வீட்டிற்குப் போனால் நம்மையும் சோகம் பீடிக்கிறது. அது போல் பக்தி நிரம்பியவர்களைப் பார்த்தாலோ, அவர்களது சங்கம் கிடைத்தாலோ, அவர்கள் பக்தி செய்த விதத்தைக் கேட்டாலோ ஹ்ருதயத்தில் பக்தி தானே உண்டாகிறது."

உடனே வியாசர் கேட்டார்,

"சரி, உங்களுக்கெப்படி பக்தி வந்தது? அதைக் கேட்டால் எனக்கு ஓரளவுக்காவது புரிகிறதா என்று பார்க்கிறேன்."

அழகிய முறுவலைச் சிந்தி விட்டு பேசத் துவங்கினார் நாரதர்.

"நான் சென்ற பிறவியில், ஒரு சிறிய கிராமத்தில் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தேன். என் தாயார் இளம் விதவை. கிராமத்திலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஜீவனம் நடத்தி வந்தார். மிகவும் நல்லவர். ஸாது.

ஒரு சமயம் எங்கள் ஊருக்கு சில ஸாதுக்கள் வந்தனர். எங்கள் ஊர்ப் பெரியவர்கள் அவர்களை வரவேற்று ஊர் எல்லையில் இருக்கும் சத்திரத்தில் தங்க வைத்தனர். பின்னர் பஞ்சாயத்தில் பேசி, எங்கள் ஊர் நதி தீரமாக இருந்ததால் சாதுர்மாஸ்ய விரதத்தை அங்கேயே மேற்கொள்ளும்படி வேண்டினர்.

ஸாதுக்களும் ஊர் மக்களின் அன்பை ஏற்று எங்கள் ஊரிலேயே நான்கு மாதங்கள் தங்க ஒப்புக் கொண்டனர்.

அப்போது என் தாயார், வந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று தவித்துக் கொண்டு கிராமத் தலைவர்களிடம் தான் தினமும் சென்று அந்த ஸாதுக்கள் தங்கும் சத்திரத்தை சுத்தம் செய்து மெழுகி, கோலம் போட்டு, விளக்கேற்றும் ஸேவையை செய்ய விரும்புவதாக வேண்டினாள். அவளது நல்ல சுபாவத்தை கருத்தில் கொண்டு, அந்த கைங்கர்யம் அவளுக்கே வழங்கப்பட்டது.

அவ்வளவு தான். என் தாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வீட்டுக்கு வந்தவளுக்கு இருப்பே கொள்ளவில்லை. உறங்கவும் இல்லை. எப்போது பொழுது விடியும் என்று காத்திருந்து மூன்று மணியானதும் எழுந்து ஓடினாள். ஐந்தே வயதான என்னை குடிசையில் தனியே உறங்கும் படி விட்டுச் செல்லத் தயங்கினாள். எனவே, என்னையும் எழுப்பி அழைத்துக் கொண்டு போனாள்.

ஸாதுக்கள் ஆடி‌ மாத அமாவாசை முதல் மார்கழி அமாவாசை வரை சாதுர் மாஸ்ய விரதம் மேற்கொள்வார்கள். பொதுவாக பரிவ்ராஜக ஸன்யாஸிகள் மூன்று நாள்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்கக் கூடாதென்பது விதி. ஆனால் சாதுர்மாஸ்ய விரத சமயத்தில் மட்டும் நான்கு மாதங்கள் ஓரிடத்தில் இருப்பார்கள். அது மழைக் காலம் என்பதால் ஸன்யாஸிகள் சஞ்சாரம் செய்வதில் சிரமங்கள் உண்டு. மழையில் அலைந்தால் உடல் நிலை பாதிக்கலாம். உடல் நிலை பாதித்தால் சிகிச்சை செய்து கொள்ளக் கூடாது.

எப்போதும் அலைந்து கொண்டிருப்பதால், நான்கு மாதங்கள் ஓரிடத்தில் தங்கி தவம் செய்து ஆன்ம சக்தியைப் பெருக்கிக் கொள்வார்கள்.

ஜீவ ஹிம்ஸை என்பது அறவே கூடாது. மழைக் காலத்தில் சிற்சிறு பூச்சிகளும், புழுக்களும் மண்ணில் அலையும். நடப்பவர்கள் கால்களில் அவை மிதிபட்டால் ஜீவ ஹிம்ஸையாகி விடும்.

இவ்வாறு பல காரணங்களை உத்தேசித்து சாதுக்கள் ஒரே இடத்தில் நான்கு மாதங்கள் தங்குவார்கள்.

என் தாய் என்னையும் இழுத்துக் கொண்டு சாதுக்கள் வசிக்கும் சத்திரத்திற்கு ஓடினாள்."

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 70

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 40

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ³
ஹேதுர் தா³மோத³ர: ஸஹ:|
மஹீத⁴ரோ மஹாபா⁴கோ³
வேக³ வாந மிதாஸ²ந:||

  • 364. விக்ஷரோ - குறைவற்றவன்
  • 365. ரோஹிதோ - சிவந்தவன்.
  • 366. மார்கோ³ - தேடப்படுபவன்.
  • 367. ஹேதுர் - காரணமாயிருப்பவன்.
  • 368. தா³மோத³ரஸ் - உலகங்களை வயிற்றில் தாங்குபவன்.
  • 369. ஸஹஹ - பொறுமையுள்ளவன்.
  • 370. மஹீத⁴ரோ - பூமியைத் தாங்குபவன்.
  • 371. மஹாபா⁴கோ³ - மகா பாக்யமுடையவன்.
  • 372. வேக³ வாந் - வேகம் உள்ளவன்.
  • 373. அமிதாஸ²நஹ - பெருத்த உணவு உண்பவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.7 

கார்பண்ய தோ³ஷோ பஹத ஸ்வபா⁴வ: 
ப்ருச்சா²மி த்வாம் த⁴ர்ம ஸம்மூட⁴ சேதா:|
யச் ஸ்²ரேய: ஸ்யாந் நிஸ்²சிதம் ப்³ரூஹி தந்மே 
ஸி²ஷ்ய ஸ்தே ஹம் ஸா²தி⁴ மாம் த்வாம் ப்ரபந்நம்||

  • கார்பண்ய - கருமித்தனம் 
  • தோ³ஷ - பலவீனம் 
  • உபஹத - தாக்கப்பட்டு 
  • ஸ்வபா⁴வஹ - குணங்கள் 
  • ப்ருச்சா²மி - நான் வினவுகிறேன் 
  • த்வாம் - உம்மிடம் 
  • த⁴ர்ம - தர்மம் 
  • ஸம்மூட⁴ - குழம்பி 
  • சேதாஹ - இதயத்தில் 
  • யத் - எதை 
  • ஸ்²ரேயஸ் - சாலச் சிறந்தது 
  • ஸ்யாத் - ஆகும் 
  • நிஸ்²சிதம் - நிச்சயமாக 
  • ப்³ரூஹி - கூறுவீராக 
  • தத் - அதை 
  • மே - எனக்கு 
  • ஸி²ஷ்ய - சீடன் 
  • தே - உமது 
  • அஹம் - நான் 
  • ஸா²தி⁴ - அறிவுறுத்துங்கள் 
  • மாம் - எனக்கு 
  • த்வாம் - உம்மிடம் 
  • ப்ரபந்நம் - சரணடைந்தேன்

இதயத்தில், கருமித்தன குணங்களின் பலவீனத்தால் தாக்கப்பட்டு, அறம் இன்னது என்றுணராமல் கடமையில் குழம்பம் அடைந்து, உம்மிடம் வினவுகிறேன். எது எனக்கு சாலச் சிறந்தது ஆகும்? எனக்கு அதை கூறுவீராக. நான் உமது சீடனாக, உம்மிடம் சரணடைந்தேன். எனக்கு அறிவுறுத்துங்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.5

ஏதந்நா நாவதா ராணாம் 
நிதா⁴நம் பீ³ஜமவ் யயம்|
யஸ்யாம் ஸா²ம் ஸே²ந ஸ்ருஜ் யந்தே 
தே³வ திர் யங் நராத³ய:||

  • ஏதந் - இந்த ஸ்வரூபமானது
  • நா நாவதா ராணாம் - பலவிதமான அவதாரங்களுக்கும்
  • நிதா⁴நம் - இருப்பிடமாகும்
  • பீ³ஜம் - காரணமாகும்
  • அவ்யயம் - அழிவற்றதும்
  • யஸ்ய - எந்த பரம புருஷனுடைய
  • அம்ஸா²ம் ஸே²ந - அம்ஸமான பிரம்மா, அந்த பிரம்மாவின் அம்ஸமான மரீசி முதலானவர்களால்
  • தே³வ திர் யங் நராத³யஹ - தேவன் மனிதன் மிருகம் முதலானவர்கள்
  • ஸ்ருஜ் யந்தே - சிருஷ்டிக்கப்படுகின்றனர்

ஆதிநாராயண ஸ்வரூபமாகிய இந்த விராட் புருஷ அவரதாரம், மற்ற எல்லா அவதாரங்களுக்கும் கருவூலம். எல்லா அவதாரங்களும் தோன்றுவதற்கு அழிவற்ற வித்து. இந்த விராட் ரூபத்தின் அம்சமாயுள்ளவர் பிரும்மதேவர். அந்த பிரும்ம தேவரின் அம்சமானவர்கள் மரீசி முதலிய பிரஜாபதிகள். அந்த பிரஜாபதிகளால் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் முதலானவர்கள் தோற்றுவிக்கப்பட்டனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.5

ஏத தி³ச்சா²ம் யஹம் ஸ்²ரோதும் 
பரம் கௌதூ ஹலம் ஹி மே।
மஹர் ஷே த்வம் ஸமர் தோ²ஸி 
ஜ்ஞாது மேவம் வித⁴ம் நரம்॥

  • ஏதத் - இதை
  • ஸ்²ரோதும் - அறிந்து கொள்ள
  • அஹம் -  நான்
  • இச்சாமி - ஆசைப்படுகிறேன்
  • ஹி - ஏனெனில்
  • மே - என்
  • கௌதூ ஹலம் - ஆசை
  • பரம் - மிகவும் அதிகம்
  • ஏவம் வித⁴ம் - இம்மாதிரியான
  • நரம் - மானிடனை
  • ஜ்ஞாதும் -  உள்ளபடி அறிய
  • மஹர் ஷே - மஹரிஷியே
  • த்வம் -  தேவரீர்
  • ஸமர்தோ² - அதற்குத் தகுந்த யோகியதை உள்ளவராய்
  • அஸி - இருக்கிறீர்

"மஹரிஷியே! {நாரதரே}, இத்தகைய மனிதனை நீர் அறிய வல்லவர் என்பதால், இவை யாவற்றையும் உம்மிடம் இருந்து கேட்க நான் பேராவல் கொண்டுள்ளேன்" என்று கேட்டார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 53 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 53 – என்றும் துன்பம் இல்லை 
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

தரவு கொச்சகக் கலிப்பா 

வஞ்சனையால் வந்த* 
பேய்ச்சி முலை உண்ட*
அஞ்சன வண்ணனை* 
ஆய்ச்சி தாலாட்டிய*
செஞ்சொல் மறையவர் சேர்* 
புதுவைப் பட்டன் சொல்*
எஞ்சாமை வல்லவர்க்கு* 
இல்லை இடர் தானே! (2)

  • வஞ்சனையால் வந்த - வஞ்சக எண்ணத்தோடு 
  • வந்த - தாய் வேடத்தில் வந்த
  • பேய்ச்சி - பேயான பூதனையினுடைய
  • முலை உண்ட - தாய்ப்பாலை உண்ட
  • அஞ்சனம் வண்ணனை - மை போன்ற நிறத்தை உடையவனான கண்ணபிரானை
  • ஆய்ச்சி - யசோதைப் பிராட்டி
  • தாலாட்டிய - தாலாட்டின விதத்தை
  • செம் சொல் - சிறந்த சொற்கள் நிறைந்த
  • மறையவர் - வேதங்களில் வல்லவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
  • சேர் - நித்ய வாசம் பண்ணப் பெற்ற
  • புதுவை - ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த
  • பட்டன் - பெரியாழ்வார் அருளிச் செய்த 
  • சொல் - இப்பாசுரங்களை
  • எஞ்சாமை - குறைவில்லாமல்
  • வல்லவர்க்கு - சொல்பவர்களுக்கு
  • இடர் இல்லை - துன்பம் ஒன்றுமில்லையாம் 

வஞ்சகமே வடிவாக வந்த பூதனையின் விஷமேறிய முலைப்பாலை அமுது செய்தவனும், மை போன்ற நிறத்தை உடையவனுமான கண்ணனை, தாலாட்டிப் பாடிய வரிகளைத் தான், வேதமோதுவோர் செழித்தோங்கிய ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார் அருளிச் செய்திருக்கிறார். இப்பாசுரங்களை குறையில்லாமல் ஓத வல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லையாம்.

அடிவரவு: மாணி உடை என்* சங்கின் எழில் ஓத* கானார் கச்சு மெய்* வஞ்சனை - தன்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்