||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.5
ஏதந்நா நாவதா ராணாம்
நிதா⁴நம் பீ³ஜமவ் யயம்|
யஸ்யாம் ஸா²ம் ஸே²ந ஸ்ருஜ் யந்தே
தே³வ திர் யங் நராத³ய:||
- ஏதந் - இந்த ஸ்வரூபமானது
- நா நாவதா ராணாம் - பலவிதமான அவதாரங்களுக்கும்
- நிதா⁴நம் - இருப்பிடமாகும்
- பீ³ஜம் - காரணமாகும்
- அவ்யயம் - அழிவற்றதும்
- யஸ்ய - எந்த பரம புருஷனுடைய
- அம்ஸா²ம் ஸே²ந - அம்ஸமான பிரம்மா, அந்த பிரம்மாவின் அம்ஸமான மரீசி முதலானவர்களால்
- தே³வ திர் யங் நராத³யஹ - தேவன் மனிதன் மிருகம் முதலானவர்கள்
- ஸ்ருஜ் யந்தே - சிருஷ்டிக்கப்படுகின்றனர்
ஆதிநாராயண ஸ்வரூபமாகிய இந்த விராட் புருஷ அவரதாரம், மற்ற எல்லா அவதாரங்களுக்கும் கருவூலம். எல்லா அவதாரங்களும் தோன்றுவதற்கு அழிவற்ற வித்து. இந்த விராட் ரூபத்தின் அம்சமாயுள்ளவர் பிரும்மதேவர். அந்த பிரும்ம தேவரின் அம்சமானவர்கள் மரீசி முதலிய பிரஜாபதிகள். அந்த பிரஜாபதிகளால் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் முதலானவர்கள் தோற்றுவிக்கப்பட்டனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment