About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 5 November 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.8 

ந ஹி ப்ரபஸ்²யாமி மமா பநுத்³யாத்³
யச் சோ²க முச்சோ²ஷண மிந்த்³ரியாணாம்|
அவாப்ய பூ⁴மா வஸபத்நம் ருத்³த⁴ம் 
ராஜ்யம் ஸுராணா மபி சாதி⁴ பத்யம்||

  • ந - இல்லை 
  • ஹி - நிச்சயமாக 
  • ப்ரபஸ்²யாமி - காண்பது 
  • மம - என்னுடைய 
  • அபநுத்³யாத் - தீர்க்க கூடியது 
  • யத் - எதுவோ அதை 
  • சோ²கம் - சோகம் 
  • உச்சோ²ஷணம் - வறட்டும் 
  • இந்த்³ரியாணாம் - புலன்களில் 
  • அவாப்ய - பெற்று 
  • பூ⁴மௌ - பூமியில் 
  • அஸபத்நம் - எதிரிகளற்று 
  • ருத்³த⁴ம் - செழிப்பான
  • ராஜ்யம் - ராஜ்ஜியம் 
  • ஸுராணாம் - தேவர்களில் 
  • அபி - கூட 
  • ச - மேலும் 
  • அதி⁴பத்யம் - அதிபதியாக

தேவர்களில் அதிபதியாக, பூமியில் எதிரிகளற்று வளமான ராஜ்ஜியத்தை பெற்றால் கூட, புலன்களை வறட்டுகின்ற என்னுடைய சோகத்தை, தீர்க்கக் கூடியது எதுவோ அதை, என்னால் காண முடியவில்லை. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment