||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
018. திருக்கண்ணங்குடி
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - நாகப்பட்டினம்
பதினெட்டாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1748 - சியாமள மேனியன் திருக்கண்ணங்குடியில் உள்ளான்
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய* வாள் அரவின் அணை மேவி*
சங்கம் ஆர் அம் கைத் தட மலர் உந்தித்* சாம மா மேனி என் தலைவன்*
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம்* அருங் கலை பயின்று*
எரி மூன்றும் செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1749 - கஜேந்திரஜனுக்கு அருளியவன் இடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கவள மா கதத்த கரி உய்யப்* பொய்கைக் கராம் கொளக் கலங்கி*
உள் நினைந்து துவள* மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபடச்*
சுடு படை துரந்தோன் குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர்*
கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி*
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1750 - மச்ச அவதாரம் எடுத்தவன் இடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வாதை வந்து அடர வானமும் நிலனும்* மலைகளும் அலை கடல் குளிப்ப*
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி* விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்*
போது அலர் புன்னை மல்லிகை மௌவல்* புது விரை மது மலர் அணைந்து*
சீத ஒண் தென்றல் திசைதொறும் கமழும்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1751 - வராக அவதாரம் எடுத்தவன் வாழுமிடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி*
வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்*
பன்றி ஆய் அன்று பார் மகள் பயலை* தீர்த்தவன் பஞ்சவர் பாகன்*
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து*
உயர் கொடி ஒளி வளர் மதியம்*
சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1752 - வாமன அவதாரம் எடுத்தவன் வாழுமிடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய்* மூவடி நீரொடும் கொண்டு*
பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக* பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்*
அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து*
அலை புனல் இலைக் குடை நீழல்*
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1753 - பரசுராம அவதாரம் எடுத்தவன் இடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மழுவினால் அவனி அரசை மூவெழுகால்* மணி முடி பொடிபடுத்து*
உதிரக் குழுவு வார் புனலுள் குளித்து*
வெம் கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி*
குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும்* குளிர் தரு சூத மாதவியும்*
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாடத்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1754 - இராம அவதாரம் எடுத்தவன் இடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வான் உளார் அவரை வலிமையால் நலியும்* மறி கடல் இலங்கையார் கோனை*
பானு நேர் சரத்தால் பனங்கனி போலப்* பரு முடி உதிர வில் வளைத்தோன்*
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆடக்*
கண முகில் முரசம் நின்று அதிர*
தேன் உலா வரி வண்டு இன் இசை முரலும்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1755 - கிருஷ்ண அவதாரம் எடுத்தவன் இடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை* அஞ்சிடாதே இட*
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவப்*
பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்*
வரையின் மா மணியும் மரதகத் திரளும்* வயிரமும் வெதிர் உதிர் முத்தும்*
திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1756 - பார்த்தசாரதி நிற்கும் இடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழியப்* பாரத மா பெரும் போரில்*
மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர்* மைத்துனற்கு உய்த்த மா மாயன்*
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்* சூழ்ந்து எழு செண்பக மலர்வாய்*
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1757 - இவற்றைப் படித்தால் வறுமையே வராது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
கலை உலா அல்குல் காரிகைதிறத்துக்* கடல் பெரும் படையொடும் சென்று*
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற* திருக்கண்ணங்குடியுள் நின்றானை*
மலை குலாம் மாட மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
உலவு சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்* வல்லவர்க்கு இல்லை நல்குரவே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்