About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 24 December 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.25 

அவ்யக்தோ யம சிந்த்யோ யம் 
அவிகார் யோய முச்யதே|
தஸ்மா தே³வம் விதி³த்வை நம் 
நாநுஸோ² சிது மர்ஹஸி||

  • அவ்யக்தோ - பார்வைக்கு எட்டாதவன் 
  • அயம் - இந்த ஆத்மா 
  • அசிந்தயோ - சிந்தனைக்கு அப்பாற்பட்டவன் 
  • அயம் - இந்த அத்மா 
  • அவிகார்யோ - மாற்றமில்லாதவன் 
  • அயம் - இந்த ஆத்மா 
  • உச்யதே - கூறப்படுகின்றது 
  • தஸ்மாத்³ - எனவே 
  • ஏவம் - இது போல 
  • விதி³த்வா - அதை நன்கறிந்து 
  • ஏநம் - இந்த ஆத்மா 
  • ந - இல்லை 
  • அநுஸோ² சிதும் - கவலைப்பட 
  • அர்ஹஸி - தகாது

இந்த ஆத்மா பார்வைக்கு எட்டாதவன், இந்த ஆத்மா சிந்தனைக்கு அப்பாற்பட்டவன். இந்த ஆத்மா மாற்றமில்லாவன். எனவே, அதை நன்கறிந்து, உடலுக்காக நீ கவலைப்பட தேவையில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment