About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 1 February 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.36

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.36

ஸவா இத³ம் விஸ்²வ மமோக⁴ லீல:
ஸ்ரு ஜத்ய வத்யத்தி ந ஸஜ்ஜதே ஸ்மிந்|
பூ⁴தேஷு சாந்தர் ஹித ஆத்ம தந்த்ர:
ஷாட்³ வர்கி³ கம் ஜிக்⁴ரதி ஷட்³ கு³ணேஸ²:||

  • அமோக⁴ லீலஹ - வியர்த்தம் அல்லாத லீலைகளை உடைய
  • ஸ: வை - அந்த ஸர்வேஸ்வரனே
  • இத³ம் விஸ்²வம் - இவ்வுலகத்தை 
  • ஸ்ருஜதி - ஸ்ருஷ்டிக்கிறார் 
  • அவதி -  ரக்ஷிக்கிறார் 
  • அத்தி -  அழிக்கிறார் 
  • ஆத்ம தந்த்ரஹ - ஸ்வதந்திரரான அவர் 
  • அஸ்மிந் - இவ்வுலகில் 
  • ந ஸஜ்ஜதே - பற்றுதல் அடைவதில்லை  
  • பூ⁴தேஷு - ஆன்மாக்கள் இடத்தில் 
  • அந்தர் ஹித ச -  மறைந்தவனாய் கொண்டு
  • ஷட்³ கு³ணேஸ²ஹ -  ஆறு வகை இந்திரியங்களுக்கு அவர் ஈஸ்வரனாய் இருந்த போதிலும்
  • ஷாட்³ வர்கி³ கம் -  அந்த அந்த இந்திரிய விஷயத்தை 
  • ஜிக்⁴ரதி -  வாசனையை முகருவது போல முகருகிறான் (அவர் அவைகளில் பற்றுதல் அடைவதில்லை என்பதாம்)

பகவானது திருவிளையாடல்கள் எல்லாம், காரிய காரணங்களைக் கொண்டவையே அன்றி வீணானது அன்று. ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைப் பின்ணணியாகக் கொண்டதே. ஆகவே, வீண் போகாத திருவிளையாடல்களைச் செய்பவரும், அனைத்து ஜீவராசிகளினுள்ளும் விளங்குபவருமான பகவான், விளையாட்டாகவே இந்த உலகத்தைப் படைக்கிறார், காக்கிறார், மேலும் அழிக்கிறார். ஆனால், அவற்றில் ஒட்டுவதில்லை. ஏனெனில், அவர் ஸ்வதந்திரர். எதற்கும் கட்டுப்படாதவர். ஐம்புலன்கள் மற்றும் மனம் ஆகிய ஆறு இந்திரியங்கட்கும் தலைவராகிய பகவான், சகல ஜீவராசிகளின் உள்ளத்திலும் இருந்து கொண்டு, அவற்றினால் நுகரப்படும் பொருள்களை நுகர்கிறார். ஆனால், அவற்றில் பற்றுக் கொள்வதில்லை. பற்றற்ற நிலையில் செய்யும் நிஷ்காம கர்மங்களின் நன்மை தீமையாகிற பலன்கள், அச்செயல்களைச் செய்பவனைப் பாதிக்காதது போல், வேண்டுதல், வேண்டாமை அற்றவரான பகவானது திருவிளையாடல்கள் பகவானைப் பாதிப்பதில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment