About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 12 February 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.2

ஸொ²நக உவாச
ஸூத ஸூத மஹா பா⁴க³ 
வத³ நோ வத³தாம் வர|
கதா²ம் பா⁴க³வதீம் புண்யாம் 
யதா³ஹ ப⁴க³வாஞ்ஸு²க:||

  • ஸொ²நக உவாச - சௌனக முனிவர் கூறுகிறார்
  • ஸூத ஸூத - ஹே! ஸூத மஹரிஷியே
  • மஹா பா⁴க³ - பெரும் பாக்யத்தை உடையவரே!
  • வத³தாம் - நன்கு சொல்கிறவர்களில்
  • வர - சிறந்தவரே!
  • யத்³ - எந்த கதையை
  • ப⁴க³வான் ஸு²க: ஸ்ரீ பகவானான ஸுகர்
  • ஆஹ - சொன்னாரோ
  • புண்யாம் - அந்தப் புண்ணியத்தை தரத்தக்க
  • ப⁴க³வதீம் - இறைவனான வாஸுதேவனின்
  • கதா²ம் - ஸ்ரீமத் பாகவதம் என்னும் கதையை
  • ந - எங்கள் பொருட்டு
  • வத³ - சொல்வீராக

சௌனக முனிவர் கூறுகிறார் - ஓ! ஸூத மஹரிஷியே! நீங்கள் பெரும் புண்ணியம் செய்தவர். கதை சொல்வதில் தாங்கள் திறமை பெற்றவர். மகாத்மாவான ஸ்ரீஸுகர், பரீஷித் மகாராஜனுக்குக் கூறிய, புண்ணியத்தைத் தரத்தக்க 'ஸ்ரீமத் பாகவதம்' என்னும் கதையை, எங்களுக்குச் சொல்ல வேண்டுகிறோம். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment