About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 12 March 2024

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.56

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.56

தம் நிஹத்ய மஹா பா³ஹுர் 
த³தா³ஹ ஸ்வர்க³ தஸ்²ச ஸ:|
ஸ சாஸ்ய கத²யா மாஸ 
ஸ²ப³ரீம் த⁴ர்ம சாரிணீம்||

  • மஹா பா³ஹுர் - பெருந் தோள்களைக் கொண்டவன் ராமன்
  • தம் நிஹத்ய - அவனைப் கொன்று
  • த³தா³ஹ - தஹனம் செய்தார்
  • ஸ: ச - அவன் உடனே
  • ஸ்வர்க³ - ஸ்வர்கத்தை
  • தஸ்² - அடைந்தான்
  • ச ஸஹ - மேலும் அவன்
  • ஆஸ்ய - ஆகாசத்தில் சற்று நின்று
  • த⁴ர்ம சாரிணீம் - தர்ம அனுஷ்டானம் உள்ள
  • ஸ²ப³ரீம் - சபரியை பற்றி
  • கத²யா மாஸ - தெரியப்படுத்தினான்

பெருந் தோள்களைக் கொண்டவன் ராமன். கபந்தனைக் கொன்று எரியூட்டியதும், அந்த கபந்தன் சொர்க்கத்தை அடைந்தான். கபந்தன், சொர்க்கத்தை அடைவதற்கு முன், அறத்தை நன்கு அறிந்தவளான சபரியை பற்றி தெரியப்படுத்தினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

No comments:

Post a Comment