About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 29 June 2024

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.5 

ந ஹி கஸ்²சித் க்ஷணமபி 
ஜாது திஷ்ட²த்ய கர்ம க்ருத்|
கார்யதே ஹ்யவஸ²: கர்ம 
ஸர்வ: ப்ரக்ருதி ஜைர் கு³ணை:||

  • ந - இல்லை 
  • ஹி - நிச்சயமாக  
  • கஸ்²சித் - யாருமே 
  • க்ஷணம் - ஒரு கணம் 
  • அபி - கூட 
  • ஜாது - எவ்வேளையிலும் 
  • திஷ்ட²தி - இருப்பது 
  • அகர்ம க்ருத் - ஒன்றும் செய்யாமல் 
  • கார்யதே - வற்புறுத்துப்படுகின்றனர் 
  • ஹி - நிச்சயமாக 
  • அவஸ²ஸ் - சுதந்திரமின்றி  
  • கர்ம - செயல் 
  • ஸர்வஃ - எல்லாம்  
  • ப்ரக்ருதிஜைர் - பௌதிக இயற்கையிலிருந்து தோன்றிய  
  • கு³ணைஹி - குணங்களால்

எவரும் ஒரு கணம் கூட ஒன்றும் செய்யாமல் இருப்பது இல்லை. எல்லாம் பௌதிக இயற்கையிலிருந்து தோன்றிய குணங்களால் சுதந்திரமின்றி செயல்பட வற்புறுத்தப் படுகின்றனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment