About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 8 February 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.43

ப்ராயோ பவிஷ்டம் க³ங்கா³ யாம் 
பரீதம் பரமர் ஷிபி⁴:|
க்ருஷ்ணே ஸ்வதா⁴மோ பக³தே 
த⁴ர்மஜ் ஞாநாதி³ பி⁴: ஸஹ||

  • பரமர் ஷிபி⁴ஹி - மஹரிஷிகளால்
  • பரீதம் -  சூழப்பட்டவராயும்
  • க³ங்கா³ யாம் -  கங்கை கரையில்
  • ப்ராயோ பவிஷ்டம் -  ப்ராயோப  வேச  விருதம் உடையவருமான
  • த⁴ர்மஜ் ஞாநாதி³ பி⁴ஸ் ஸஹ - அறுவகை ஐஸ்வர்யங்களோடு
  • க்ருஷ்ணே -  ஸ்ரீ கிருஷ்ணர்
  • ஸ்வதா⁴மோ பக³தே -  தனது இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்த அளவில்

இந்த ஸ்ரீமத் பாகவதத்தைக் கங்கைக் கரையில் இறக்கும் வரை உண்ணா விரதம் என்கிற பிராயோபவேச விரதத்தை மேற்கொண்ட பரீக்ஷித் மகாராஜனுக்கு, அநேக மகரிஷிகள் சூழ்ந்திருந்த போது ஸ்ரீசுகர் கூறினார். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தர்மம், ஞானம் முதலிய அறுவகைச் செல்வங்களுடன் தனது இருப்பிடமான வைகுண்டத்திற்குச் சென்ற பின், 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment