About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 8 February 2024

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.45

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.45 

த்ரை கு³ண்ய விஷயா வேதா³: 
நிஸ் த்ரை கு³ண்யோ ப⁴வார் ஜுந|
நிர்த்³வந் த்³வோ நித்ய ஸத்த் வஸ்தோ² 
நிர் யோக³ க்ஷேம ஆத்ம வாந்||

  • த்ரை கு³ண்ய - ஜட இயற்கையின் மூன்று குணங்கள் பற்றிய 
  • விஷயா - விஷயங்கள் 
  • வேதா³ஹ - வேத இலக்கியங்கள் 
  • நிஸ் த்ரை கு³ண்யோ - ஜட இயற்கையின் மூன்று குணங்களுக்கு மேற்பட்ட 
  • ப⁴வ - ஆவாய் 
  • அர்ஜுந - அர்ஜுநனே 
  • நிர்த்³ வந் த்³வோ - இருமைகள் அற்ற 
  • நித்ய ஸத்த் வஸ்தோ² - எப்போதும் உண்மையில், தூய ஆன்மீக நிலையில் நின்று
  • நிர் யோக³ க்ஷேம - அடைதல், காத்தல் எனும் எண்ணங்களிலிருந்து விடுபெற்ற 
  • ஆத்ம வாந் - தன்னில் நிலைபெற்ற 

அர்ஜுநா! வேத இலக்கியங்கள், ஜட இயற்கையின் மூன்று குணங்கள் பற்றிய விஷயங்கள் கொண்டுள்ளது. ஜட இயற்கையின், மூன்று குணங்களுக்கு, அப்பாற்பட்டவனாக ஆவாயாக. இருமைகள் அற்ற, தூய ஆன்மீக நிலையில், அடைதல், காத்தல் எனும் எண்ணங்களிலிருந்து விடுபெற்று, தன்னில் நிலைபெறுவாயாக.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment