About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 2 March 2024

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.52

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.52

ஜகா³ மஸஹ மாரீசஸ்
தஸ்யாஸ்² ரம பத³ம் ததா³|
தேந மாயா விநா தூ³ரம்
அப வாஹ்ய ந்ருபாத் மஜௌ|| 

  • ஸஹ மாரீசஸ் - மாரிசனோடு கூட 
  • ததா³ - அப்பொழுது
  • தஸ்ய - அவருடைய
  • ஆஸ்²ரம பத³ம் - ஆசிரம ஸ்தானத்தை
  • ஜகா³ ம - வந்தடைந்தான்
  • மாயா விநா - மாயாவியான
  • தேந - அவனைக் கொண்டு
  • ந்ருபாத் மஜௌ - ராஜ குமாரர்கள் இருவரையும்
  • தூ³ரம் - வெகுதூரம் போகச் 
  • அப வாஹ்ய – செய்து

மாரீஸனுடன் சேர்ந்து, ராமன் இருந்த அந்த ஆசிரமத்திற்குச் சென்றான். அந்த மாயாவி மாரீசன், தசரதனின் மகன்களான ராமனையும், லக்ஷ்மணனையும் நெடும் தொலைவுக்கு அழைத்துச் சென்ற பிறகு,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

No comments:

Post a Comment