About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 14 September 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 13

ருத்³ரோ ப³ஹுஸி²ரா ப³ப்⁴ருர் 
விஸ்²வ யோநி: ஸு²சிஸ்²ரவா:|
அம்ருத: ஸா²ஸ்²வத: ஸ்தா²ணுர் 
வரா ரோஹோ மஹாதபா:||

  • 115. ருத்³ரோ - பக்தர்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைப்பவர். பக்தர்களுக்கு நல்லதை வழங்குபவர். துன்பத்தை அழிப்பவர்.
  • 116. ப³ஹுஸி²ரா - பல தலைகள் கொண்டவர்.
  • 117. ப³ப்⁴ருர் - தாங்கி நிற்பவர்.
  • 118. விஸ்²வ யோநிஸ்² - எல்லா உலகத்தவருடன் உறவு கொண்டவர்.
  • 119. ஸு²சிஸ்²ரவாஹ - தூய சொற்களையே கேட்பவர். தெய்வீக காதுகளை உடையவர்.
  • 120. அம்ருதஸ்² - ஆரா அமுதன். பக்தர்களுக்குத் திருப்தி அளிக்காத அமிர்தமாவார்.
  • 121. ஸா²ஸ்²வதஸ் ஸ்தா²ணுர் - என்றும் நிலைத்து நிற்பவர். பக்தர்களை ஆசீர்வதிப்பதில் உறுதியாக இருப்பவர்.
  • 122. வரா ரோஹோ - அடையத் தக்க மேலானவர் பரமபரநாதன். சிறந்த ஏற்றம் உடையவர்.
  • 123. மஹாதபாஹ - எல்லையில்லாத ஞானமுடையவர். ஞானமூர்த்தி. சிறந்த அறிவை உடையவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment