ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 51 - பூமா தேவி அளித்த
உச்சி மணிச் சுட்டி
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கச்சொடு பொன் சுரிகை*
காம்பு கனக வளை*
உச்சி மணிச் சுட்டி*
ஒண் தாள் நிரைப் பொன் பூ*
அச்சுதனுக்கென்று*
அவனியாள் போத்தந்தாள்*
நச்சு முலை உண்டாய்! தாலேலோ*
நாராயணா! அழேல் தாலேலோ!
- கச்சொடு - இடுப்புப் பட்டையையும்
- பொன் - பொன்னால் செய்த
- சுரிகை - உடை வாளையும்
- காம்பு - காம்புகளை உடைத்த பூவடிவிலுள்ள
- கனம் - பொன்னாலான
- வளை - வளைகளையும்
- மணி - ரத்னம் இழைத்துச் செய்யப்பட்டதான
- உச்சி - உச்சியிலே சாத்தக் கூடிய
- மணிச்சுட்டி - மணிச் சுட்டியையும்
- ஒள் தாள் - அழகிய காம்புகளுடைய
- நிரை - அடர்த்தியான
- பொற்பூ - தங்கப் பூக்களையும்
- அச்சுதனுக்கு என்று - கண்ணபிரானுக்குக் கொடுப்பீர் என்று
- அவனியாள் - பூமிப் பிராட்டியானவள்
- போத்தந்தாள் - அனுப்பினாள்
- நஞ்சு - விஷமேற்றின
- முலை - பூதனையின் முலையின் பாலை
- உண்டாய் - உண்ட கண்ணனே!
- தாலேலோ! - கண்ணுறங்கு
- நாராயணா! - நாராயணா!
- அழேல் தாலேலோ! - அழாமல் கண்ணுறங்கு!
பொன்னாலான வளையல்களையையும், நெற்றியிலணிய உயர்ந்த கற்களாலான நெற்றிச் சுட்டியையும், காம்புகளை உடைத்த பூவடிவிலுள்ள தங்கத்திலான ஆபரணங்களையையும், பூமிப்பிராட்டியானவள் கண்ணனுக்கு கொடுக்குமாறு அனுப்பியுள்ளாள். பூதனையின் முலையிலிருந்த விஷப்பாலை உண்ட கண்ணனே, கண்ணுறங்கு, நாராயணா! அழாமல் கண்ணுறங்கு!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment