About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 16 April 2024

திவ்ய ப்ரபந்தம் - 116 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 116 - கற்பக மரத்தைப் பூமிக்குக் கொண்டு வந்தவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

கற்பகக் காவு* கருதிய காதலிக்கு*
இப்பொழுது ஈவன் என்று* இந்திரன் காவினில்* 
நிற்பன செய்து* நிலாத் திகழ் முற்றத்துள்* 
உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான்* 
உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்|

  • இந்திரன் காவினில் - இந்த்ரனுடைய உத்யாந வநத்திலிருந்த
  • கற்பகம் காவு - கற்பகச் சோலையை
  • கருதிய - தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று விரும்பிய
  • காதலிக்கு - தனக்கு ப்ரியையான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு
  • இப்பொழுது - இப்பொழுதே
  • ஈவன் - கொண்டு வந்து தருவேன்
  • என்று - என்று சொல்லி
  • நிலா திகழ் - நிலவொளி சூழ்ந்த
  • முற்றத்துள் - அவள் வீட்டு முற்றத்தில்
  • நிற்பன செய்து - கற்பக விருக்ஷத்தை நிற்க வைத்து  
  • உய்த்தவன் - தழைக்கும்படி செய்த கண்ணன்
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • உம்பர் கோன் - அன்று தன் பராக்ரமத்தை காட்டிய தேவர்கள் தலைவன்
  • என் புறம் - என்னுடைய 
  • புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

தன்னுடைய காதலி சத்யபாமாவின் விருப்பத்திற்கு இணங்க இந்திரனுடைய நந்தவனத்திலிருந்த கற்பகச் சோலையை, "இதோ இப்பொழுதே கொண்டு வந்து தருகிறேன் " என்று கூறி அவள் வீட்டு நிலா காயும் முற்றத்தில் இருத்தி மலரச் செய்தவன், கண்ணன், என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! விண்ணோர் தலைவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment