||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
1. ஆநந்த³ரூபே நிஜபோ³த⁴ரூபே
ப்³ரஹ்ம ஸ்வரூபே ச்ருதி மூர்திரூபே।
சசாங்கரூபே ரமணீயரூபே
ஸ்ரீரங்க³ரூபே ரமதாம் மநோ மே॥
ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தி இருப்பவரும், அழகிய உருவமுடையவரும், ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி செய்பவருமான அந்த ரங்கநாதரிடம் என் மனம் லயிக்கின்றது.
2. காவேரிதீரே கருணாவிலோலே
மந்தா³ரமூலே த்⁴ருʼதசாருசேலே।
தை³த்யாந்த காலே அகி²லலோகலீலே
ஸ்ரீரங்க³லீலே ரமதாம் மநோ மே॥
காவேரி தீரத்தில் அதீதமான கருணையுடன் அருள் புரிபவரும், மந்தார மரத்தின் மேல் அமர்ந்தபடி புரியும் தனது அழகான லீலைகளால் மனத்தைக் கவர்பவரும் அசுரர்களின் அந்திம காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து அகில உலகையும் விளையாட்டாகவே காப்பவருமாகிய ஸ்ரீரங்கனுடைய லீலைகளின் பால் என் மனம் ஈடுபடுகின்றது.
3. லக்ஷ்மீ நிவாஸே ஜக³தாம் நிவாஸே
ஹ்ருʼத்பத்³ம வாஸே ரவிபி³ம்ப³ வாஸே।
க்ருʼபா நிவாஸே கு³ணப்³ருʼந்த³ வாஸே
ஸ்ரீரங்க³ வாஸே ரமதாம் மநோ மே॥
லட்சுமி தேவியின் இருப்பிடமாக உள்ளவரும் (திருமாலின் மார்பை விட்டு என்றும் நீங்காதிருப்பவள் மகாலட்சுமி) அகில உலகிற்கும் ஆதாரமானவரும் பக்தர்களின் தாமரை போன்ற இதயத்தில் வசிப்பவரும், சூரிய மண்டலத்தில் ஒளிர்பவரும், கருணையின் இருப்பிடமாய் இருப்பவரும், காருண்யத்துக்கு ஆதாரமானவரும், ஸ்ரீரங்கத்திலே வசிப்பவருமான அந்த ரங்கநாதரின் பால் என் மனம் வசப்படுகிறது.
4. ப்³ரஹ்மாதி³வந்த்³யே ஜக³தே³க வந்த்³யே
முகுந்த³ வந்த்³யே ஸுரநாத² வந்த்³யே।
வ்யாஸாதி³ வந்த்³யே ஸநகாதி³ வந்த்³யே
ஸ்ரீரங்க³ வந்த்³யே ரமதாம் மநோ மே॥
பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப் படுபவரும், உலக உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத் தகுந்தவரும், முகுந்தனால் துதிக்கப் படுபவரும், தேவேந்திரனால் நமஸ்கரிக்கப் படுபவரும், வியாசர் மற்றும் சனகாதி முனிவர்களால் போற்றப் படுபவரும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமான ரங்கநாதரை தரிசிக்க என் மனம் விழைகின்றது.
5. ப்³ரஹ்மாதி⁴ ராஜே க³ருடா³தி⁴ ராஜே
வைகுண்ட² ராஜே ஸுரராஜ ராஜே।
த்ரைலோக்ய ராஜே அகி²ல லோக ராஜே
ஸ்ரீரங்க³ ராஜே ரமதாம் மநோ மே॥
பிரம்மாவுக்கு அதிபதியும் கருடனுக்கு எஜமானரும், வைகுண்டத்தின் அரசரும், தேவராஜனுக்கு ராஜாவும், மூன்று உலகங்களுக்கும் அரசனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் அதிபதியும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமாகிய ரங்கநாதனிடம் என் மனம் நாட்டமுடையதாகிறது.
6. அமோக⁴ முத்³ரே பரிபூர்ண நித்³ரே
ஸ்ரீயோக³ நித்³ரே ஸஸமுத்³ர நித்³ரே।
ச்ரிதைக ப⁴த்³ரே ஜக³தே³க நித்³ரே
ஸ்ரீரங்க³ ப⁴த்³ரே ரமதாம் மநோ மே॥
உயர்வான அபய முத்திரையை உடையவரும், முழுமையான நித்திரையை உடையவரும், யோக நித்திரையில் ஆழ்ந்தவரும், பாற்கடலில் பள்ளி கொண்டு இருப்பவரும், அடைக்கலம் அடைந்தவர்களின் தேடுதலுக்குச் செவிசாய்த்து அருள்பவரும், பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் ஒரே ஒருவருமான ஸ்ரீரங்கவாசரின் பால் என் மனம் எப்போதும் ஈர்க்கப்படுகிறது.
7. ஸ சித்ர சாயீ பு⁴ஜகே³ந்த்³ர சாயீ
நந்தா³ங்க சாயீ கமலாங்க சாயீ।
க்ஷீராப்³தி⁴ சாயீ வடபத்ர சாயீ
ஸ்ரீரங்க³ சாயீ ரமதாம் மநோ மே॥
ஆச்சரியப்படும் வடிவினில் படுத்திருப்பவரும், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இருப்பவரும், நந்தன் மடியில் படுத்திருப்பவரும், பிராட்டியாரின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பவரும், ஸ்ரீரங்கத்தில் சயனித்து இருப்பவரும் ஆகிய ரங்கநாதரின் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது.
8. இத³ம் ஹி ரங்க³ம் த்யஜதா மிஹாங்க³ம்
புநர் நசாங்கம் யதி³ சாங்க³மேதி।
பாணௌ ரதா²ங்க³ம் சரணேம்பு³ கா³ங்க³ம்
யாநே விஹங்க³ம் சயநே பு⁴ஜங்க³ம்॥
இது வல்லவா ஸ்ரீரங்கம்! இத் தலத்தில் மரணிப்பவர்கள் மறு பிறப்பால் அவதிப்படுவது இல்லை. அப்படி மறு சரீரம் பெற்றால் (மறு பிறவியில் பிறந்தால்) கையில் சக்கரம், காலில் கங்கா ஜலம், பயணிக்கும் போது கருடன், சயனத்தில் சர்ப்பம் என்று சாட்சாத் மகாவிஷ்ணுவின் சாருப்யத்தையே அடைவர். (பகவான் தன்னோடு அவர்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவர்களும் அவரது வடிவையே பெறுவர் என்பது உட்பொருள்).
9. ரங்க³நாதா²ஷ்டகம் புண்யம்
ப்ராதருத்தா²ய ய: படே²த்।
ஸர்வாந் காமாநவாப்நோதி
ரங்கி³ஸாயுஜ்ய மாப்நுயாத்॥
எவரொருவர் இந்த ரங்கநாத அஷ்டகத்தை தினமும் காலையில் படிக்கிறாரோ அவரது நியாயமான எல்லா ஆசைகளும் நிறைவேறுவதோடு, ரங்கநாதரின் சாயுஜ்யத்தையும் அவர் பெறுவார் என்பது நிச்சயம்!
॥இதி ஸ்ரீ ரங்க³நாதா²ஷ்டகம் ஸம்பூர்ணம்॥
ஸ்ரீ ரங்கநாதர் ஸ்துதி।।
ஸப்த ப்ராகார மத்யே ஸரஸி ஜ முகுலோத் பாஸமானே விமானே
காவேரீ மத்யதேசே பணிபதி ஸயனே சேஷபர்யங்க பாகே।
நித்ரா முத்ரா பிராமம் கடிநிச்டஸிர: பார்கவ விந்யஸ்த ஹஸ்தம்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம் பஜேஹம்।।
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
No comments:
Post a Comment