About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 26 February 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.4

தஸ்ய புத்ரோ மஹா யோகீ³ 
ஸமத்³ ருங் நிர்வி கல்பக:|
ஏகாந்த மதிருந் நித்³ரோ 
கூ³டோ⁴ மூட⁴ இவேயதே||

  • தஸ்ய - அந்த வியாஸ பகவானின்
  • புத்ரோ -  புத்திரரான ஸுகரோ
  • மஹா யோகீ³ -  பெரிய யோக சித்தியை உடையவர்
  • ஸமத்³ ருங் -  பிரம்மத்தை சாக்ஷாத்  தரித்தவர்
  • நிர்வி கல்பகஹ - பேத ஞானம் அற்றவர்
  • ஏகாந்த மதி - ஏகா க்ரமான சித்தத்தை உடையவர்
  • உருந் நித்³ரோ -  அவித்யை என்பதே சிறிதும் அற்றவர் 
  • கூ³டோ⁴ -  மிகவும் அறிந்தவராலே தெரிந்து கொள்ளபடத் தக்கவர்
  • மூட⁴ இவ - அறிவிலியைப் போன்று
  • ஈயதே - காணப்படுகிறார்

அந்த வியாசருடைய திருக்குமாரராகிய ஸ்ரீஸுகர் பெரிய யோகி. தான், பிறர் என்ற வேறுபாடின்றி அனைத்தும் பிரும்மத்தின் ஸ்வரூபமே என்று உணர்ந்தவர்; வேறுபாடற்றவர்; பகவானிடமே மனத்தைச் செலுத்தியவர்; மாயையாகிய தூக்கத்தை ஒழித்தவர்; தன்னை வெளியுலகிற்குக் காட்டிக் கொள்ளாதவர். ஆகவே, ஒரு மூடன் போல் காட்சியளிப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment