About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 7 January 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.28

ஏதே சாம் ஸ²கலா: பும்ஸ: 
க்ருஷ்ணஸ் து ப⁴க³வாந் ஸ்வயம்|
இந்த்³ராரி வ்யா குலம் லோகம் 
ம்ருட³யந்தி யுகே³ யுகே³||

  • ஏதே ச - முன் சொல்லப்பட்டவர்கள் எல்லோரும் 
  • பும்ஸஹ - விராட் புருஷனின் 
  • அம்ஸ² கலாஃ - சில அம்சங்களேயாம் 
  • க்ருஷ்ணஸ் து - கிருஷ்ணரோ என்றால் 
  • ஸ்வயம் ப⁴க³வாந் - தானே பகவாந் (அம்சீ என்றதாம்) 
  • யுகே³ யுகே³ - அப்படிப்பட்டவர் ஒவ்வொரு யுகத்திலும் 
  • இந்த்³ராரி வ்யா குலம் - இந்திரனுடைய சத்துருக்களால் பிடிக்கப்பட்ட 
  • லோகம் - உலகத்தை 
  • ம்ருட³யந்தி - காப்பாற்றுகிறார்

முன் சொல்லப்பட்ட அனைவருமே விராட்யுருஷனான பகவானுடைய சில அம்சங்களே. அதாவது, ஒரு சிறிய பாகமே. ஆனால், ஸ்ரீ கிருஷ்ணனோ உண்மையில் பகவானே. இந்திரனது பகைவர்களான அசுரர்கள் இவ்வுலகைத் துன்புறுத்தும் போது, ஒவ்வொரு யுகத்திலும் இவரின் அவதாரங்கள் உலகைக் காண்கின்றன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment