||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 7
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:
ய: கர்ணாஞ்சலி ஸம்புடை: அஹரஹ:
ஸம்யக் பிப³த்யா த³ராத்³
வால்மீகே: வத³நாரவிந்த³ க³லிதம்
ராமாயணாக்²யம் மது⁴|
ஜந்ம வ்யாதி⁴ ஜரா விபத்தி மரணை:
அத்யந்த: ஸோபத்³ரவம்
ஸம்ஸாரம் ஸ விஹாய க³ச்ச²தி
புமாந் விஷ்ணோ: பத³ம் ஸா²ஸ்²வதம்||
- ய: - எவனொருவன்
- அஹரஹ: - தினம் தினம்
- கர்ணாஞ்சலி ஸம்புடைர் - செவிகள் என்கிற குவித்த கரங்களாகிய பாத்திரங்களால்
- வால்மீகேர் - வால்மீகியினுடைய
- வத³நாரவிந்த³ க³லிதம் - வாக்கிலிருந்து (கிளியின் வாயிலிருந்து விழுவதைப் போல்)
- ராமாயணாக்²யம் மது⁴ - ராமாயணம் என்னும் தேனை
- ஸம்யக் - நன்றாக
- ஆத³ராத்³ - ஆவலுடன்
- பிப³தி - பருகுகிறானோ
- ஸ: புமாந் - அந்த மனிதன்
- ஜந்ம வ்யாதி⁴ ஜரா விபத்தி மரணைர் - பிறப்பு , நோய், முதுமை , விபத்துக்கள் , மரணம் இவைகளால்
- அத்யந்தஸ் ஸோபத்³ரவம் - மிகவும் தொல்லை கொடுக்கும்
- ஸம்ஸாரம் - சம்சாரத்தை
- விஹாய - நீத்து
- ஸா²ஸ்²வதம் - நிரந்தரமான
- விஷ்ணோஃ பத³ம் - விஷ்ணுவின் பதத்திற்கு
- க³ச்ச²தி - செல்கிறான்
எவனொருவன் தினம் தினம் செவிகள் என்கிற குவித்த கரங்களாகிய பாத்திரங்களால் வால்மீகியினுடைய வாக்கிலிருந்து (கிளியின் வாயிலிருந்து விழுவதைப் போல்) ராமாயணம் என்னும் தேனை நன்றாக ஆவலுடன் பருகுகிறானோ அந்த மனிதன் பிறப்பு , நோய், முதுமை , விபத்துக்கள் , மரணம் இவைகளால் மிகவும் தொல்லை கொடுக்கும் ஸம்சாரத்தை
நீத்து, நிரந்தரமான விஷ்ணுவின் பதத்திற்கு செல்கிறான்
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment