About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 24 January 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 97

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 67

உதீ³ர்ண: ஸர்வதஸ்² சக்ஷுர் 
அநீஸ²ஸ்² ஸா²ஸ்²வத ஸ்தி²ர:|
பூ⁴ஸ²யோ பூ⁴ஷணோ பூ⁴திர் 
விஸோ²கஸ்² ஸோ²க நாஸ²ந:||

  • 630. உதீர்ணஸ் - தன் திருமேனியை நன்றாக வெளிப்படுத்துபவர். எல்லா உயிரினங்களுக்கும் மேலானவர்.
  • 631. ஸர்வதஸ்² சக்ஷு - யாவரும் தன் கண்ணால் காணும் படியானவர். எங்கும் கண்களை உடையவர். எல்லாவற்றையும் பார்ப்பவர்.
  • 632. அநீஸ²ஸ்² - தலைவன் இல்லாதவர். பரதந்த்ரன்
  • 633. ஸா²ஸ்²வத ஸ்திரஹ - எப்பொழுதும் நிலையாய் இருப்பவர். நித்யமாக இருப்பவர்.
  • 634. பூஸ²யோ - பூமியில் சயனித்து அருள் புரிபவர். வெறுமையான பூமியில் தூங்குபவர்.
  • 635.  பூஷணோ - அலங்கரிக்கப்பட்டவர்.
  • 636. பூதிர் - பக்தர்களுக்கு செல்வமாக இருப்பவர்.
  • 637. விஸோ²கஸ்² - சோகம் இல்லாதவர்.
  • 638. ஸோ²க நாஸ²நஹ - சோகத்தை ஒழிப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment