||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 52
க³ப⁴ஸ்தி நேமி: ஸத் வஸ்த்த²:
ஸிம்ஹோ பூ⁴த மஹேஸ்²வர:|
ஆதி³ தே³வோ மஹா தே³வோ
தே³வேஸோ தே³வ ப்⁴ருத்³ கு³ரு:||
- 487. க³ப⁴ஸ்தி நேமிஸ் - ஒளிரும் சக்கரத்தை ஆயுதமாக கொண்டவர். தனது பிரகாசத்தால் அனைத்தையும் பிரகாசமாக்குகிறார். ஆயிரம் ஆரங்கள் கொண்ட சுதர்சன சக்கரம் உள்ளது. அதை அவர் கட்டுப்படுத்தவும், வழிநடத்தவும், தர்மத்தின் பாதையை நோக்கி அனைவரையும் வழிநடத்தவும் பயன்படுத்துகிறார்.
- 488. ஸத் வஸ்த்த²ஸ் - அடியவர் நெஞ்சில் குடியிருப்பவர். பக்தர்களின் இதயத்தில் வசிப்பவர்.
- 489. ஸிம்ஹோ - தன் பக்தர்களைத் துன்புறுத்துபவர்களைத் தண்டிப்பவர்.
- 490. பூ⁴த மஹேஸ்²வரஹ - எல்லா உயிரினங்களுக்கும் மேலானவர். பிரபஞ்சத்தின் கர்த்தா.
- 491. ஆதி³ தே³வோ - முதல் காரணமாக இருப்பவர். பிரகாசம் கொண்டவர்.
- 492. மஹா தே³வோ - விளையாட்டாக எதனையும் செய்யும் மகாதேவர். பரம கடவுள். ஆரம்பமும் முடிவும் இல்லாத படைப்பாளி.
- 493. தே³வேஸோ - தேவர்களுக்கு ஈசன். அனைத்து தேவர்களுக்கும் ஆதரவாளர். உச்சக் கட்டுப்பாட்டாளர்.
- 494. தே³வ ப்⁴ருத்³ - தேவர்களைத் தாங்குபவர். அனைத்து தேவர்களையும் போஷிப்பவர். அனைத்து அறிவையும் பரப்புபவர்.
- 495. கு³ருஹு - வேத அறிவை வழங்கும் தேவர்களின் ஆசாரியன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment