||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
009. திருக்கவித்தலம்
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கும்பகோணம்
ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 1 பாசுரம்
------------
1. திருமழிசையாழ்வார் - 1 பாசுரம்
1. நான்முகன் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 2431 - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம் 50)
------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
காணியும் இல்லமும் கைப் பொருளும் ஈன்றோரும்*
பேணிய வாழ்க்கையும் பேர் உறவும் சேணில்*
புவித் தலத்தில் இன்பமும் பொங்கு அரவம் ஏறிக்*
கவித் தலத்தில் கண் துயில்வோன் காண்*
- காணியும் – அடியேனுக்கு பூமியும்
- இல்லமும் – வீடும்
- கை பொருளும் – கையிலுள்ள திரவியமும்
- ஈன்றோரும் – பெற்ற தாய் தந்தையரும்
- பேணிய வாழ்க்கையும் – விரும்பிய நல்வாழ்வும்
- பேர் உறவும் – நெருங்கிய சுற்றத்தாரும்
- சேணில் புவித்தலத்தில் இன்பமும் – மறுமையிலும் இம்மையிலும் உண்டாகக்கூடிய இன்பங்களும்
- கவித்தலத்தில் – திருக்கவித்தலம் என்னும் ஸ்தலத்தில்
- பொங்கு அரவம் ஏறி – சீறும் தன்மையுள்ள ஆதிசேஷன் மீது ஏறி
- கண் துயில்வோன் – திருக்கண் வளர்ந்தருளும் திருமாலினுடைய
- கால் – திருவடிகளேயாம்
------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 1
திருமழிசையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 2431 - கண்ணனை எண்ணுவதே உய்யும் வழி
நான்முகன் திருவந்தாதி - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (50)
கூற்றமும் சாரா* கொடு வினையும் சாரா*
தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன்*
ஆற்றங்கரைக் கிடக்கும்* கண்ணன் கடல் கிடக்கும்*
மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment