About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 17 September 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.17

ஸ்²ருண்வதாம் ஸ்வகதா²ம் க்ருஷ்ண: 
புண்ய ஸ்²ரவண கீர்தந:|
ஹ்ருத்³யந்த: ஸ்தோ² ஹ்ய ப⁴த்³ராணி 
விது⁴நோதி ஸுஹ்ருத் ஸதாம்||

  • புண்ய ஸ்²ரவண கீர்தநஹ - எவற்றைப் பற்றி கேட்பதாலும் சொல்வதாலும் நன்மை உண்டாகுமோ அப்படிப்பட்டவரும் 
  • ஸதாம் ஸுஹ்ருத் - ஸாதுக்களுக்கு நண்பனுமான
  • க்ருஷ்ண ஹ்ய - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவோ எனில்
  • ஸ்வகதா²ம் - தனது கதையை
  • ஸ்²ருண்வதாம் - கேட்பவர்களது
  • அந்தஸ் ஸ்தோ² - அந்தராத்வாவில் இருந்து கொண்டு
  • ஹ்ருதி³ - அவர்களது மனத்தில் உள்ள
  • அப⁴த்³ராணி - கல்மஷங்களை
  • விது⁴நோதி - போக்கடிக்கிறார் 

பகவானுடைய திருவிளையாடல்களைக் கேட்பதாலும் சொல்வதாலும் மனிதர்கள் தூய்மை பெறுகிறார்கள். அவரோ பக்தர்களின் நண்பன். தமது கதைகளைக் கேட்போரிகளின் உள்ளத்தில் பகவான் வந்து அமர்ந்து, அங்கு மண்டிக் கிடக்கும் காமம் முதலிய குற்றங்களைக் களைந்தொழிகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment