About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 11 April 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.27

நாதி ப்ரஸீத³த்³ த்⁴ருத³ய: 
ஸரஸ் வத்யாஸ் தடே ஸூ²சௌ|
விதர் கயந் விவிக் தஸ்த² 
இத³ம் ப்ரோவாச த⁴ர்ம வித்|| 

  • நாதி ப்ரஸீத³த்³ த்⁴ருத³ய: - மிகத் திருப்தி அடையாத மதத்தை உடையவரும்
  • த⁴ர்ம வித் - சகல தர்மத்தை அறிந்தவருமான வியாஸர்
  • ஸூ²சௌ - பரிசுத்தமான
  • ஸரஸ் வத்யாஸ் - ஸரஸ்வதீ நதியின் 
  • தடே - கரையில்
  • விவிக் தஸ்த² - ஏகாந்தமான பிரதேசத்தில்
  • விதர் கயந் - தனக்குள் ஏதோ ஒன்றை நினைத்தவராய்
  • இத³ம் ப்ரோவாச - இதை சொன்னார் 

அனைத்து அறநெறிகளையும் நன்குணர்ந்த வியாஸ முனிவர், தூய்மையான ஸரஸ்வதீ நதிக்கரையில் இருப்பினும், சிறிதும் மகிழ்ச்சியின்றித் தெளியாத மனத்துடன் தனித்திருந்து, தனக்குத் தானே பலபடியாக ஆலோசித்து இவ்விதம் கூறலானார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment