||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
மல்யுத்த வீரர்களின் வீழ்ச்சி|
அனைவரும் போட்டிக்கு தயாராகினர். புகழ் பெற்ற வீரனான சனுரா, கிருஷ்ணன் மற்றும் பலராமனிடம் சென்று, "உங்கள் இருவரின் சாகசங்களை நான் நன்கு அறிவேன், நீங்கள் நிஜத்தில் வீரர்கள் தான், நீங்கள் இருவரும் மல்யுத்தத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று நன்றாக தெரியும், இதை அறிந்த மகாராஜா உங்களை இந்த போட்டிக்கு அழைத்து உள்ளார். உங்களை நான் மனமாற வரவேற்கிறேன்" என்றான். கிருஷ்ணன் சனுராவின் பொல்லாத நோக்கத்தை புரிந்துகொண்டார். ஆனால் கிருஷ்ணன் ராஜதந்திரமாக, "நாம் அனைவரும் அரசரின் ஆசைப்படி நடப்போம். ஆனால் நாங்கள் சிறிய பிள்ளைகள். எங்கள் வயிதில் இருக்கும் பிள்ளைகளுடன் சண்டையிட்டால் தான் நன்றாக இருக்கும். இந்த மல்யுத்த போட்டியில் சில விதி முறைகளை பின்பற்ற வேண்டும், இல்லையென்றால் நீங்கள் பாவத்திற்கு ஆளாகக்கூடும்."
ஆனால் சனுரா கிருஷ்ணனிடம், "கிருஷ்ணா நீங்கள் அந்த யானையை கொன்றதில் இருந்தே தெரிந்து விட்டது நீங்கள் மிக பெரிய வீரர்கள் என்று. நீங்கள் இந்த வீரர்களுடன் எதிர்த்து போரிட தயாராக உள்ளீர்கள். தாங்கள் என்னை எதிர்த்து உங்கள் பலத்தை காட்டுங்கள், பலராமன் முஷ்டிக்ஹா என்பவனை எதிர்த்து போரிட்டும்" என்றான்.
இந்த போட்டியை ஏற்றுக்கொண்டு, கிருஷ்ணனும் பலராமனும், முஷ்டிக்ஹாவையும் சனுராவையும் நோக்கி நடந்தனர். கைக்குள் கைவைத்து, காலுக்குள் கால் விட்டு, கிருஷ்ணனும் சனுராவும் ஒருவரை இருவர் இழுத்து வெற்றி பெற விரும்பினர். உடலுடன் உடல் முட்டிக்கொண்டு, கட்டி உருண்டனர். முன் பின் தள்ளி, தரையில் உருண்டு ஒருவரை ஒருவர் அடித்தனர், சனுராவை தலைமீது தூக்கி சுழற்றி அடித்து, இறுதியில் கிருஷ்ணன் சனுராவை வென்றார். இதேபோல் பலராமனும் முஷ்டிக்ஹாவை அடித்து உதைத்தார், அவன் வாயில் ரத்தம் வரும் வரை அடித்து, கடைசியில் அவனை அழித்தார்.
இருவரும் அழிந்தவுடன், மற்ற வீரர்களும் களத்தில் இறங்கினர். கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் ஈடு இணையே இல்லை. அனைவரும் சில நொடிகளிலேயே சுருண்டு விழுந்தனர். அனைத்து மக்களும் கூடி கை தட்டி அவர்களை உற்சாகம் செய்தனர். மக்களின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை. கோபியர் கூடத்தில் இருந்த கிருஷ்ணனின் நண்பர்கள் களத்தில் குதித்து பாட்டு பாட ஆரம்பித்தனர். கிருஷ்ணனும் பலராமனும் பாட்டுக்கு ஆடத்தொடங்கினர். அனைவரும் இவர்கள் நடனத்தை பார்த்து பெரு மகிழ்ச்சியடைந்தனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment