About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 29 January 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.34

யத்³ யே ஷோ பரதா தே³வீ 
மாயா வைஸா²ரதீ³ மதி:|
ஸம்பந்ந ஏவேதி விது³ர்
மஹிம் நிஸ் வே மஹீயதே||

  • வைஸா²ரதீ³ - ஸர்வஞனான  ஈஸ்வரனுடையதும்
  • தே³வீ - ஸம்சார சக்கரத்தினால் விளையாடுகின்றதுமான
  • யேஷா மாயா - இந்த மாயை 
  • மதிஹி - வித்யா ரூபமாக 
  • யதி³ உபரதா -  எப்பொழுது பரிணாமத்தை அடைகிறதோ அப்பொழுது 
  • ஸம்பந்ந ஏவ - ஜீவ ப்ரும்ம ஸ்வரூபத்தை அடைந்ததாய்
  • ஸ்வே மஹிம்நி - தனது பரமானந்த ஸ்வரூபத்தில்
  • மஹீயதே - விளங்குகிறான் 
  • இதி - என்று 
  • விது³ர் - பெரியோர்கள் அறிகின்றனர்

எல்லாமறிந்த பகவானது தொடர்புடையது அவித்தையாகிற மாயை. மாயை என்னும் இவள், உலகியல் சக்கரத்தைக் கைக்கொண்டு லீலைகள் புரிகிறாள். அதாவது, தானே எல்லாம் அறிந்தவள் என்கிற பொய்யான எண்ணத்தைத் தோற்று விக்கிறாள். இந்த மாயையே, உண்மை வித்யை ஞானமாக மாறுதலை அடையுமேயானால், அப்பொழுது ஜீவன் பிரும்ம ஸ்வரூபனாக ஆகி, பரமானந்தத்தில் திளைக்கறான் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment