About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 27 February 2024

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.52

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.52 

யதா³ தே மோஹ கலிலம் 
பு³த்³தி⁴ர் வ்யதித ரிஷ்யதி|
ததா³ க³ந்தாஸி நிர் வேத³ம் 
ஸ்²ரோ தவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச||

  • யதா³ - எப்பொழுது 
  • தே - உனது 
  • மோஹ - மயக்கமெனும் 
  • கலிலம் - அடர்ந்த காடு 
  • பு³த்³தி⁴: - அறிவோடு செய்யப்படும் உன்னத தொண்டு 
  • வ்யதிதரிஷ்யதி - கடந்து செல்லுகிறதோ 
  • ததா³ - அப்போது 
  • க³ந்தாஸி - நீ ஆவாய் 
  • நிர்வேத³ம் - சமநிலை 
  • ஸ்²ரோதவ்யஸ்ய - கேட்க வேண்டியவை 
  • ஸ்²ருதஸ்ய - முன்னரே கேட்டவை 
  • ச - மற்றும்

உனது அறிவோடு செய்யப்படும் உன்னத தொண்டு, எப்போது மோகக் குழப்பத்தை கடந்து செல்லுகிறதோ, அப்போது நீ கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் வேதனையேற்படாது, நீ சமநிலை ஆவாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

No comments:

Post a Comment