About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 29 February 2024

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.53

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.53
 
ஸ்²ருதி விப்ரதி பந்நா தே 
யதா³ ஸ்தா²ஸ்யதி நிஸ்²சலா|
ஸமாதா⁴ வசலா பு³த்³தி⁴: 
ஸ்ததா³ யோக³ மவாப்ஸ் யஸி||

  • ஸ்²ருதி - வேதங்களின் 
  • விப்ரதிபந்நா - பலன்களின் விளைவுகளால் பாதிக்கப்படாத 
  • தே - உனது 
  • யதா³ - எப்போது 
  • ஸ்தா²ஸ்யதி - நிலைபெறுகிறதோ 
  • நிஸ்²சலா - அசைவற்று 
  • ஸமாதௌ⁴ - திவ்யமான உணர்வில் 
  • அசலா - உறுதியான 
  • பு³த்³தி⁴ஹி - அறிவு 
  • ததா³- அப்போது 
  • யோக³ம் - தன்னுணர்வை 
  • அவாப்ஸ்யஸி - அடைவாய்

வேதங்களின் பலன்களின் விளைவுகளால் பாதிக்கப்படாமல், எப்போது, உனது மனம் அசைவற்று, திவ்யமான உணர்வில், உறுதியான அறிவு நிலை பெறுகிறதோ, அவ்வேளையில், தன் உணர்வை அடைவாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment