||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.25
பே⁴ஜிரே முநயோ தா²க்³ரே
ப⁴க³வந் தம் அதோ⁴க்ஷஜம்|
ஸத்த்வம் விஸு²த்³தம் க்ஷேமாய
கல்பந்தே யேநு தாந் ஹிந||
- அத² - இக் காரணத்தால்
- அக்³ரே - முற் காலத்தில்
- முநயோத் - மஹரிஷிகள்
- விஸு²த்³தம் - இயற்கையின் முக்குணங்களுக்கும் மேல் மிகப் பரிசுத்தமானவரும்
- ஸத்த்வம் - ஸத்வ ரூபியாக உள்ளவரும்
- ப⁴க³வந்தம் - பகவானான
- அதோ⁴க்ஷஜம் - திவ்யமானவருமான
- க்ஷேமாய - முடிவான நன்மையை அடைய
- பே⁴ஜிரே - சரணமாக அடைந்தனர்
- யேநு தாந் ஹிந - எவர்கள் அந்த மஹரிஷிகளை அநுசரித்து இருக்கின்றனரோ அவர்கள்
- இஹ - இவ்வுலகில்
- கல்பந்தே - யோகியர்கள் ஆகிறார்கள்
ஆகையால், முற்காலத்தில் முனிவர்கள் தங்களது நன்மையைக் கருதி தூய்மையானவரும், சுத்த ஸத்வ ரூபமானவருமான பகவான் வாசுதேவனைச் சரணமடைந்தனர். இப்போதும் அந்த முனிவர்களைப் பின்பற்றியவர்கள், இவ்வுலகியல் கட்டுகளை உதறித் தள்ளி விடுபட்டு முக்தியை அடைகின்றனர்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment