||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 4
மேக⁴ ஸ்²யாமம் பீத கௌஸே²ய வாஸம்
ஸ்ரீவத் ஸாங்கம் கௌஸ்து போ⁴த்³ பா⁴ஸி தாங்க³ம்|
புண்யோ பேதம் புண்ட³ரீ காய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே³ ஸர்வ லோகைக நாத²ம்||
நம: ஸமஸ்த பூ⁴தாநாம்
ஆதி³ பூ⁴தாய பூ⁴ப்⁴ருதே|
அநேக ரூப ரூபாய
விஷ்ணவே ப்ரப⁴ விஷ்ணவே||
- பீத - மஞ்சள்
- கௌஸே²ய - பட்டு
- வாஸம் - உடை, வஸ்திரம்
- ஸ்ரீவத்ஸம் - தாங்குபவர்
- அங்கம் - குறி
- கௌஸ்துப⁴ம் - ரத்தினம்
- உத்³
பா⁴ஸி தாங்க³ம் - அலங்கரிக்கப்பட்ட
மற்றும் அங்க என்பது உடலின் ஒரு பகுதியாகும்
- புண்யா - ஆசீர்வதிக்கப்பட்ட நபர்
- உபேதம் - சூழப்பட்டுள்ள
- புண்ட³ரீ கா - தாமரை
- ஆயதா - நீளம் மற்றும் அகலம்
- அக்ஷம் - கண்
- விஷ்ணும் வந்தே³ - நான் விஷ்ணுவை வணங்குகிறேன்
- ஸர்வ - அனைத்து
- லோக - உலகம்
- ஏகா - மட்டும், என்றும்
- நாத²ம் – தலைவர்
மழை மேகங்களின் ஆழமான கருநீல நிறத்தை உடைய திருமேனியர்; கவர்ச்சிகரமான மஞ்சள் நிற பட்டு உடையில் அலங்கரிக்கப்பட்டவர்; திருமார்பில் அற்புதமான ஸ்ரீ வத்ஸம் எனப்படும் முத்திரையால் அலங்கரிக்கப்பட்டவர்; தன் உடம்பில் கௌஸ்துப ரத்தினத்தின் பிரகாசத்தை ஒளிரச் செய்பவர்; ஆசீர்வதிக்கப்பட்ட புண்ணிய மக்களால் தொடர்ந்து சூழப் பெற்றவர்; தாமரை மலரைப் போல நீளமாகவும் அகலமாகவும் அழகாகவும் திருக்கண்களை உடையவர்; எல்லா உலகங்களுக்கும் ஒப்பற்ற தலைவர். இப்படிப்பட்ட மகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment