About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.13 

தத: ஸ²ங்கா²ஸ்² ச பே⁴ர்யஸ்² ச
பணவா நக கோ³முகா²:|
ஸஹஸை வாப்⁴ய ஹந்யந்த 
ஸ ஸ²ப்³த³ஸ்து முலோ ப⁴வத்||  

  • ததஸ் - அதன் பிறகு
  • ஸ²ங்கா²ஸ்² - சங்குகள்
  • ச - மேலும்
  • பே⁴ர்யஸ்² - மத்தளங்கள்
  • ச - மேலும்
  • பணவ ஆநக - தாரைகளும் முரசுகளும்
  • கோ³முகா²ஹ - கொம்புகள்
  • ஸஹஸா - திடீரென
  • ஏவ - நிச்சயமாய்
  • அப்⁴ய ஹந்யந்த - ஒரே சமயத்தில் ஒலித்தன
  • ஸ: - அந்த
  • ஸ²ப்³த³ஸ் - ஒருமித்த சப்தம்
  • துமுல: - கிளர்ச்சி
  • அப⁴வத் – உண்டாயிற்று

அதன் பின், சங்குகள், மத்தளங்கள், முரசுகள், கொம்புகள், தாறைகள், தம்பட்டங்கள் என அனைத்தும் திடீரென ஒரே சமயத்தில் முழங்க, அப்பேரொலி மிகவும் பயங்கரமாக இருந்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment