||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 3
||ஓம் நமோ பகவதே வாஸுதேவாய||
ஸா²ந்தா காரம் பு⁴ஜக³ ஸ²யநம்
பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்
விஸ்²வாதாரம் க³க³ந ஸத்³ருஸ²ம்
மேக⁴ வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்|
- ஸா²ந்தா காரம் - சாந்தத்தின் உருவம்
- பு⁴ஜக³ - பாம்பு
- ஸ²யநம் - படுக்கை
- பத்³மநாப⁴ம் - தொப்புளில் தாமரையை உடையவர்
- ஸுரேஸ²ம் - தேவர்களின் இறைவன்
- விஸ்²வாதாரம் - பிரபஞ்சத்தின் உருவம்
- க³க³ந - வானம்
- ஸத்³ருஸ²ம் - ஒப்பிடத்தக்கது
- மேக⁴ வர்ணம் - மேகம் போன்ற கரு நீல நிறம்
- ஸு²ப⁴ - அழகான, மங்களகரமான
- அங்க³ம் - உடல் உறுப்புகள்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம்
யோகி³ ஹ்ருத்³ த்⁴யாந க³ம்யம்
வந்தே³ விஷ்ணும் ப⁴வ ப⁴ய ஹரம்
ஸர்வ லோகைக நாத²ம்||
- லக்ஷ்மீ காந்தம் - லட்சுமி தேவியை கவர்ந்திழுப்பவர்
- கமல - தாமரை
- நயநம் - கண்
- யோகி³ - பகவானின் மீது முழு கவனம் செலுத்துபவர்
- ஹ்ருத்³ - இதயம்
- த்⁴யாந - தியாநம்
- க³ம்யம் - அடையக் கூடியது
- வந்தே³ - வணங்குகிறேன்
- விஷ்ணும் - விஷ்ணுவை
- ப⁴வ - உலக இருப்பு
- ப⁴ய - பயம்
- ஹரம் - அழிப்பார்
- ஸர்வ - அனைத்தும்
- லோக - உலகம்
- ஏகா - மட்டும், என்றும்
- நாத²ம் - தலைவர்
பெருமான் சாந்தமே வடிவானவர்; திருவனந்தாழ்வானாகிற திருவணை மேல் பள்ளி கொள்பவர்; நாபியில் தாமரைப் பூவை அழகாகப் பெற்றிருப்பவர்; தேவர்களின் தலைவர்; உலகுக்கு ஆதாரமாய் இருப்பவர். ஆகாயம் போல் பரந்துள்ளவர்; மேக வண்ணர்; அனைத்து லக்ஷணங்களும் பொருந்திய திருமேனி உடையவர்; திருமகளின் உள்ளத்தைக் கவர்ந்தவர்; செந்தாமரைக் கண்ணர்; யோகத்தில் இருந்து கொண்டு தியானிக்கும் ரிஷிகளின் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவர்; பிறவிப் பிணியைப் போக்குபவர்; அனைத்துலகுக்கும் தலைவர். இத்தகைய மகா விஷ்ணுவை வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment