About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் – 1.12 

தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம்
குரு வ்ருத்³த⁴: பிதாமஹ:|
ஸிம்ஹ நாத³ம் விநத்³யோச்சை:
ஸ²ங்க²ம் த³த்⁴மௌ ப்ரதா பவாந்||

  • தஸ்ய - அவனுடைய (துரியோதனனுடைய) இதயத்தில் 
  • ஸஞ்ஜநயந் - அதிகரிக்கின்ற 
  • ஹர்ஷம் - மகிழ்ச்சி 
  • குரு வ்ருத்³த⁴ஃ - குரு வம்சத்தின் முதியவர் 
  • பிதாமஹஹ - பாட்டனார் பீஷ்மர்
  • ஸிம்ஹ நாத³ம் - சிங்கத்தைப் போன்ற கர்ஜனை ஒலி 
  • விநத்³ய - அதிர்வடைந்து 
  • உச்சைஹி - மிக சத்தமாக 
  • ஸ²ங்க²ம் - சங்கு 
  • த³த்⁴மௌ - ஊதினார் 
  • ப்ரதா பவாந் - கீர்த்தி மிக்க பெரும் வீரர்

அப்போது, குரு வம்சத்தின் மூத்தவரும் மாபெரும் வீரரும் பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனை போன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment