About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 7 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - அறிமுகம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தையின் அத்யாயம் சிறிய விளக்கம் 1

முதல் அத்யாயம் - அர்ஜுன விஷாத யோகம்
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். போர்க்களத்துக் காட்சிகளையும், அர்ஜுனன் கவலையால் கடமை மறந்து போரிட மறுத்து கூறும் காரணங்களை விவரிப்பது.

இரண்டாவது அத்யாயம் - ஸாங்க்ய யோகம்
பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது. நிச்சயமான மரணம், நிலையான ஆத்மா, அர்ஜுனனின் கவலைக்கான காரணம் பற்றி விளக்குவது.

மூன்றாவது அத்யாயம் - கர்ம யோகம்
உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம். நாம் செய்கின்ற செயலின் காரணங்களையும், செயலின் முக்கியத்துவம் பற்றி விளக்குவது.

நான்காவது அத்யாயம் - ஞான கர்ம சன்யாச யோகம்
பாவம், புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது. மக்கள் எப்படியெல்லாம் செயல் புரிகிறார்கள் எப்படி எல்லாம் செயல் புரிய வேண்டும் என்று விவரிப்பது.

ஐந்தாவது அத்யாயம் - கர்ம சன்யாச யோகம்
நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது. செயலின் பலனை துறப்பது எப்படி? பலனை துறந்தவன் எப்படி இருப்பான் என்று விளக்குவது.

ஆறாவது அத்யாயம் - ஆத்ம ஸம்யம யோகம்
கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய் விடக்கூடாது. தியானம் எப்படி செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்களை பற்றி விளக்குவது.

ஏழாவது அத்யாயம் - ஞான விஞ்ஞான யோகம்
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே கடவுள் தான் என உணர்வது. இயற்கையை இயக்கும் இறைவனை அறிந்தவர், மாயையினால் அறியாதவர், வழிபடுவோர் பற்றி விளக்குவது.

எட்டாவது அத்யாயம் - அக்ஷர ப்ரஹ்ம யோகம்
எந்நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது. மரண காலம் பற்றியும், மறு பிறவியைத் தவிர்க்க மரண காலத்தில் மனிதன் செய்ய வேண்டியவை பற்றியும் விவரிப்பது.

ஒண்பதாவது அத்யாயம் - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்
கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது. எல்லாமாக உள்ள இறைவனின் செயலை அறிந்த்தவர்கள், அறியாதவர்கள் பற்றி விளக்குவது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment