About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 13 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

வசுதேவரும் நந்தகோபரும்|

கம்சனுக்குக் கப்பம் கட்டுகிறவர்களில் ஒருவர் நந்தகோபர். ஒவ்வொரு வருடமும் அவர் கம்சனுக்குக் கப்பம் கட்டுவது வழக்கம். இந்த வருடம் கப்பம் கட்ட வேண்டிய நாள் நெருங்கி விட்டதால் அவர் மதுரா சென்றார். நந்தகோபர் மதுரா வந்திருக்கிறார் என்று கேள்விபட்டதும் வசுதேவர் அவரைப் பார்க்க அவருடைய இருப்பிடத்திற்குச் சென்றார். நந்தகோபரும் வசுதேவரும் நெருங்கிய நண்பர்கள். நந்தகோபரைக் கண்டதும் வசுதேவர் அன்பு பொங்க அவரை இரு கரங்களாலும் தழுவிக் கொண்டார்.


இருவரும் அவரவர் நலன்களைப் பற்றி வெகு நேரம் விசாரித்தார்கள். தம்முடைய மனைவி ரோகிணிக்கும் அவளுக்குப் பிறந்த குழந்தைக்கும் கோகுலத்தில் இடம் கொடுத்ததற்காக வசுதேவர் நந்தகோபருக்கு நன்றி செலுத்தினார். கிருஷ்ணன் தம் குழந்தை என்று அறிவிக்காமல் அந்தக் குழந்தையின் நலனைப் பற்றி விசாரித்தார். கோகுலத்தைப் பற்றி எல்லா விஷயங்களையும் நந்தகோபர் சொல்ல, அதைக் கேட்டு வசுதேவர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.


ஆனால் கோகுலத்தில் எதாவது தகராறு நிகழும் என்று வசுதேவர் எதிர் பார்த்ததனால் விரைவாக ஊர் திரும்பும்படி நந்தகோபரைக் கேட்டுக் கொண்டார். நந்தகோபரும் வசுதேவரிடம் விடை பெற்றுக் கொண்டு, தமது நண்பர்களுடன் மாட்டு வண்டிகளில் தம் இருப்பிடமான கோகுலம் திரும்பினார். பயணத்தின் போது நந்தகோபர் கடவுளைத் தியானம் செய்து கொண்டே போனார். ஏதோ ஆபத்து இல்லாவிடில் வசுதேவர் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார் என்று அவர் நினைத்து கொண்டே போனார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment