||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
001. திருவரங்கம்
ஸ்ரீரங்கம் - திருச்சி
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 12
திருமங்கை ஆழ்வார்
212. திவ்ய ப்ரபந்தம் - 2038 - அரங்கனை நினைவார் என் தலை மீது தங்குவார்
திருக்குறுந்தாண்டகம் - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (7)
இம்மையை மறுமை தன்னை* எமக்கு வீடு ஆகி நின்ற*
மெய்ம்மையை விரிந்த சோலை* வியன் திரு அரங்கம் மேய*
செம்மையைக் கருமை தன்னைத்* திருமலை ஒருமையானை*
தன்மையை நினைவார் என் தன்* தலைமிசை மன்னுவாரே|
213. திவ்ய ப்ரபந்தம் - 2043 – அஞ்சாதே! என்று காட்சி தந்தார்
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (12)
ஆவியை அரங்க மாலை* அழுக்கு உடம்பு எச்சில் வாயால்*
தூய்மை இல் தொண்டனேன் நான்* சொல்லினேன் தொல்லை நாமம்*
பாவியேன் பிழைத்தவாறு என்று* அஞ்சினேற்கு அஞ்சல் என்று*
காவி போல் வண்ணர் வந்து* என் கண்ணுளே தோன்றினாரே|
214. திவ்ய ப்ரபந்தம் - 2044 – அரங்கனை கண்டேன்! பாவங்கள் அகன்றன
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (13)
இரும்பு அனன்று உண்ட நீரும்* போதரும் கொள்க,*
என் தன் அரும்பிணி பாவம் எல்லாம்* அகன்றன என்னை விட்டு,*
சுரும்புஅமர் சோலை சூழ்ந்த* அரங்கமா கோயில் கொண்ட,*
கரும்பினைக் கண்டு கொண்டு* என் கண் இணை களிக்குமாறே|
215. திவ்ய ப்ரபந்தம் - 2050 – திருக்கோயில் சேர்க! உய்யலாம்
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
பிண்டியார் மண்டை ஏந்திப்* பிறர் மனை திரி தந்து உண்ணும்*
உண்டியான் சாபம் தீர்த்த* ஒருவன் ஊர்*
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம்*
கச்சி பேர் மல்லை என்று மண்டினார்*
உய்யல் அல்லால்* மற்றையார்க்கு உய்யல் ஆமே? (2)
216. திவ்ய ப்ரபந்தம் - 2062 - திருவரங்கம் எங்கே என்கிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம் (11)
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்*
பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்*
எள் துணைப் போது என் குடங்கால் இருக்க கில்லாள்*
எம் பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்*
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல்*
மட மானை இது செய்தார் தம்மை*
மெய்யே கட்டு விச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!*
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே?
217. திவ்ய ப்ரபந்தம் - 2063 - அரங்கனை எண்ணி அயர்கின்றாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (12)
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்*
நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்*
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ! என்னும்*
வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்*
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்*
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்*
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்*
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே|!
218. திவ்ய ப்ரபந்தம் - 2065 - திருமால் புகழ் கேட்கவே என் மகள் விரும்புகிறாள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் (14)
முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை*
மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற*
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை*
அந்தணர் தம் சிந்தையானை*
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்*
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு*
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக! என்று*
மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே|
219. திவ்ய ப்ரபந்தம் - 2069 - திருநீர்மலை செல்ல விரும்புகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (18)
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்*
கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்*
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்*
பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்*
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்*
எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்*
இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே?
220. திவ்ய ப்ரபந்தம் - 2070 - குடந்தை நகரும் பாடுகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
முற்று ஆரா வன முலையாள் பாவை*
மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள்*
தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்*
அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ! என்னும்*
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்*
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி*
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்*
பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே|
221. திவ்ய ப்ரபந்தம் - 2073 - தோழி! எம்பிரான் கோவில் திருவாலி யாமே?
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (22)
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா*
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்*
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி*
எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய*
இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்*
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்*
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு*
இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே|
222. திவ்ய ப்ரபந்தம் - 2074 - கண்ணனை கனவில் கண்டால் விட மாட்டேன்
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (23)
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து*
என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே*
தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்*
சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன*
கள் ஊரும் பைந் துழாய் மாலை யானைக்*
கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது*
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்*
என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே?
223. திவ்ய ப்ரபந்தம் - 2075 - தோழி! எம்பிரான் ஊர் திருவரங்கமாமே?
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம் (24)
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்!*
இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட*
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்*
பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி*
உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து*
என் பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து*
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே|
224. திவ்ய ப்ரபந்தம் - 2076 - தோழி! என்னை கவர்ந்தவர் ஊர் திருவரங்கம்
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (25)
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்*
கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்*
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே*
தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி*
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்*
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு*
பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே*
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே|
பொய்கை ஆழ்வார்
225. திவ்ய ப்ரபந்தம் - 2087 - பகவானை மறப்பேனா
முதலாம் திருவந்தாதி - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
ஒன்றும் மறந்தறியேன்* ஓத நீர் வண்ணனை நான்*
இன்று மறப்பனோ? ஏழைகாள்!*
அன்று கரு அரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்*
திருவரங்கம் மேயான் திசை|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment