||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
032 கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே|
வைஷ்ணவத்தில் இரு திருவடிகள். பெரிய திருவடிகள் - கருடாழ்வார். சிறிய (இரண்டாவது) திருவடி – ஹனுமான்.
பெரிய திருவடியான கருடன் எப்பொழுதும் எம்பெருமானை சுமந்து கொண்டு செல்லும் வாகனமாவார். இராமாயணத்தில் சிறிய திருவடியான அனுமான் ராம லக்ஷ்மணர்களை தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார்.
கருடன் தன் தாயான வினதையின் அடிமைத்தனத்தை நீக்கும் பொருட்டு அமிர்தகலசத்தை தேவர்களிடம் இருந்து கவர்ந்து வரச் சென்று தேவர்களுடன் போரிட்டு இறுதியில் மகாவிஷ்ணுவின் ஆணைப்படி பணிந்து அவர்க்கு வாகனமாகிறார்.
பெரியாழ்வார் கூடல் மாநகர் மன்னன் சந்தேகத்தைத் தீர்த்து, பொற்கிழியைப் பெற்றுக் கொண்டு யானை மீதேறி மதுரை வீதிகளில், யானை மீதேறி பவனி வரும் போது, எம்பெருமான் தேவி சகிதம் கருட வாகனத்தில் காட்சியளித்தார்.
ஆழ்வார் திருநகரியில் கருடனுக்கென தனி உற்சவமே உண்டு. இங்குக் கோவில் வெளிச் சுவரில் அமர்ந்திருக்கும் கருடன் விஷேசமானவன்.
இந்த கருடனுக்கு அருள்பட்சிராஜர் என்ற பெயரும் உண்டு. ஒருமுறை இஸ்லாமியர்கள் படையெடுப்பின் காரணமாக திருவுருவச் சிலைகளுக்கு, பாதுகாப்பின்மை ஏற்பட, நம்மாழ்வாரின் காய்ச்சிய திருமேனியை எடுத்துக் கொண்டு கோழிக்கோட்டில் மறைத்து வைத்தனர்.
மீண்டும் அமைதித் திரும்பியதும், ஒளித்து வைத்த சிலையைத் தெடிச் செல்கையில். ஒளித்த இடம் மறந்து விடுகிறது. அப்போது கருடன் பறந்து வந்து இடத்தை அடையாளம் சொன்னது, நம்மாழ்வார் சிலை மீண்டும் சந்நிதியில் எழுந்தருளச் செய்தனர்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " இப்படி பெரிய திருவடியும், சிறிய திருவடியும் எம்பெருமானை சுமந்து கொண்டு திரிந்து கைங்கர்யம் பண்ணினார்கள். வைத்தமாநிதி பெருமானை சுமக்க நான் ஆசை கூட பாடலையே! அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கலையே!!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment