About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

திவ்ய ப்ரபந்தம் - 22 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 22 - பாவம் பறந்து விடும்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

செந்நெலார் வயல் சூழ்* திருக்கோட்டியூர்* 
மன்னு நாரணன்* நம்பி பிறந்தமை*
மின்னு நூல்* விட்டு சித்தன் விரித்த* 
இப்பன்னு பாடல் வல்லார்க்கு* இல்லை பாவமே! (2)

  • செம் நெல் - செந்நெல் தாந்யங்களால்
  • ஆர் - நிறையப் பெற்ற
  • வயல் - கழனிகளாலே
  • சூழ் - சூழப்பட்ட
  • திருக்கோட்டியூர் - திருக்கோட்டியூரிலே
  • மன்னு - நித்யவாஸம் பண்ணுகிற
  • நாரணன் - நாராயணன்
  • நம்பி - ஸர்வகுண பூர்ணனான ஸர்வேச்வரன்
  • பிறந்தமை - திரு அவதரித்த பிரகாரத்தை
  • மின்னு - விளங்கா நின்ற 
  • நூல் - பூணூலை உடைய
  • விட்டுசித்தன் - பெரியாழ்வார்
  • விரித்த - விஸ்தரித்து அருளிச் செய்த
  • பன்னு - ஜ்ஞாநிகள் எப்போதும் அநுஸந்திக்கக் கடவதான
  • இப் பாடல் - இப்பரசுரங்களை
  • வல்லார்க்கு - கற்றவர்களுக்கு
  • பாவமில்லை - பாபமில்லை

திருவாய்ப்பாடியில் திருவவதரித்த கண்ணன்தான், செந்நெல் தானியங்கள் நிரம்பியும், வயல்களால் சூழப்பட்டதுமான, திருக்கோட்டியூரில் ஸ்ரீமந்நாராயணனாக பரிபூர்ணனாய் எழுந்தருளியிருக்கிறான். பூணூலை அணிந்த விஷ்ணுசித்தன் (பெரியாழ்வார்) அருளியதும், ஞானிகள் எப்பொழுதும் அநுஸந்திக்க வல்லதும், நாரணன் கண்ணனாக அவதரித்த விஷயத்தை விஸ்தரிப்பதுமான, இப்பத்து பாசுரங்களை ஓதுபவர்களுக்கு பாவங்கள் அழிந்துபோகும் என்பதில் ஐய்யமில்லை.

அடிவரவு: வண்ணம் ஓடுவார் பேணி* உறி கொண்ட கை* வாய் பத்து கிடக்கில்* செந்நெல் - சீதக் கடலுள்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment