About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பகாசுரன் வதம்|

கிருஷ்ணனும் பலராமனும் உணவு வகைகளை எடுத்து வைத்துக் கொண்டு, விடிய காலையிலேயே கன்றுகளை மேய்க்கச் சென்றார்கள். உச்சிப் பொழுது ஆனதும், கன்றுகளைத் தண்ணீர் குடிக்க ஓர் ஏரிக்கு அழைத்துச் சென்றார்கள். 


கன்றுகள் தண்ணீர் குடித்த பிறகு இவர்களும் மற்றச் சிறுவர்களும் தண்ணீர் குடிக்க ஏரியில் இறங்கினார்கள். தண்ணீர் குடித்து விட்டு, மேலே ஏறி வந்தால் அங்கே ஒரு பயங்கரமான கொக்கு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். தங்களை அது கொன்று விடும் என்று எல்லாச் சிறுவர்களும் பயந்தார்கள். 


கம்சனுடைய தோழனான பகாசுரன் என்ற கொடிய அசுரன் தான் அந்தக் கொக்கு உருவத்தில் இருந்தான். அந்த கொக்குக்குக் கூர்மையான நீண்ட அலகுகள் இருந்தன. அது கிருஷ்ணனைப் பார்த்தவுடன் அவன் பக்கம் ஓடிச் சென்று அவனை விழுங்கி விட்டது. இதைக் கண்ட பலராமனும் மற்றவர்களும் அப்படியே தங்கள் நினைவு இழந்தார்கள். 


ஆனால் கிருஷ்ணனோ தன்னை நெருப்புப் பந்தமாக மாற்றிக் கொண்டு கொக்கின் தொண்டையை எரிக்க ஆரம்பித்தான். வேதனை பொறுக்காமல் கொக்கு கிருஷ்ணனை உமிழ்ந்து விட்டது. கிருஷ்ணனை தன் அலகுகளால் கொத்திக் கொல்லப் பார்த்தது. ஆனால் கிருஷ்ணனோ தன் இரு கைகளால் அதன் இரு அலகுகளையும் பற்றி அதன் வாயைக் கிழித்து அதைக் கொன்றான். 


இந்நிகழ்ச்சியைக் கண்டு சிறுவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். வீடு திரும்பியதும் நடந்ததை எல்லாம் அவர்கள் யசோதையிடம் சொன்னார்கள். ஆனால் அவள் அவர்களுடைய வார்த்தைகளை நம்பவில்லை. கிருஷ்ணன் மீது அன்பு மேலிட அவள் அவனை அணைத்துக் கொண்டு கொஞ்சினாள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment