||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பகாசுரன் வதம்|
கிருஷ்ணனும் பலராமனும் உணவு வகைகளை எடுத்து வைத்துக் கொண்டு, விடிய காலையிலேயே கன்றுகளை மேய்க்கச் சென்றார்கள். உச்சிப் பொழுது ஆனதும், கன்றுகளைத் தண்ணீர் குடிக்க ஓர் ஏரிக்கு அழைத்துச் சென்றார்கள்.
கன்றுகள் தண்ணீர் குடித்த பிறகு இவர்களும் மற்றச் சிறுவர்களும் தண்ணீர் குடிக்க ஏரியில் இறங்கினார்கள். தண்ணீர் குடித்து விட்டு, மேலே ஏறி வந்தால் அங்கே ஒரு பயங்கரமான கொக்கு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். தங்களை அது கொன்று விடும் என்று எல்லாச் சிறுவர்களும் பயந்தார்கள்.
ஆனால் கிருஷ்ணனோ தன்னை நெருப்புப் பந்தமாக மாற்றிக் கொண்டு கொக்கின் தொண்டையை எரிக்க ஆரம்பித்தான். வேதனை பொறுக்காமல் கொக்கு கிருஷ்ணனை உமிழ்ந்து விட்டது. கிருஷ்ணனை தன் அலகுகளால் கொத்திக் கொல்லப் பார்த்தது. ஆனால் கிருஷ்ணனோ தன் இரு கைகளால் அதன் இரு அலகுகளையும் பற்றி அதன் வாயைக் கிழித்து அதைக் கொன்றான்.
இந்நிகழ்ச்சியைக் கண்டு சிறுவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். வீடு திரும்பியதும் நடந்ததை எல்லாம் அவர்கள் யசோதையிடம் சொன்னார்கள். ஆனால் அவள் அவர்களுடைய வார்த்தைகளை நம்பவில்லை. கிருஷ்ணன் மீது அன்பு மேலிட அவள் அவனை அணைத்துக் கொண்டு கொஞ்சினாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment