About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

108 திவ்ய தேசங்கள் - 005 - திரு அன்பில் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

005. திரு அன்பில் (திருச்சி)
ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 1 பாசுரம்

1. திருமழிசையாழ்வார் - 1 பாசுரம்
1. நான்முகன் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 2417 - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
போற்றி செய வோர் குடைக் கீழ்ப் பொன்னாடும் இந்நாடும்
நால் திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை தோற்றம் இலா
எந்தை அன்பில் ஆதி இணைத் தாமரை அடிக்கே
சிந்தை அன்பிலாதார் சிலர் 

  • தோற்றம் இலா எந்தை - பிறப்பில்லாத எமது தந்தையும்
  • அன்பில் ஆதி - திருவன்பில் என்னும் திருப்பதியில் எழுந்தருளி இருக்கின்ற முழுமுதற் கடவுளுமான எம்பெருமானது
  • இணை தாமரை அடிக்கு - இரண்டு திருவடித் தாமரைகளினிடத்தில்
  • சிந்தை அன்பு இலாதார் சிலர் - தமது மனத்தில் பக்தியைக் கொள்ளாதவராகிய சில பேர்
  • போற்றி செய - யாவரும் தமக்கு வாழ்த்துக் கூற
  • ஓர் குடை கீழ் - ஒற்றை வெண் கொற்றக் குடையின் நிழலிலே
  • பொன் நாடும் - பொன்னுலகமாகிய தேவ லோகத்தையும்
  • நால்திசையும் இ நாடும் - நான்கு திக்கின் எல்லை வரையிலும் உள்ள இம்மண்ணுலகத்தையும்
  • ஆண்டாலும் - தனி அரசாட்சி செய்தாலும்
  • நன்கு இல்லை - அதனால் அவர்க்கு யாதொரு நன்மையும் உண்டாகாது
---------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 1

திருமழிசையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 2417 - பக்தர் உள்ளத்தில் உறைபவன் திருமால்
நான்முகன் திருவந்தாதி - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)
நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்* 
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்* 
நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்* 
அணைப்பார் கருத்தன் ஆவான்| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment