About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.20 

அத² வ்யவஸ் தி²தாந் த்³ருஷ்ட்வா
தா⁴ர்த ராஷ்ட்ராந் கபித்⁴வஜ:|
ப்ரவ்ருத்தே ஸ²ஸ்த்ர ஸம்பாதே
த⁴நுருத்³ யம்ய பாண்ட³வ:||

  • அத² - அதன் பின் 
  • வ்யவஸ் தி²தாந் - எதிர் நிற்கும் 
  • த்³ருஷ்ட்வா - பார்த்து 
  • தா⁴ர்த ராஷ்ட்ராந் - திருதராஷ்டிரரின் புதல்வர்கள் 
  • கபித்⁴வஜஹ - அனுமானின் கொடியைக் தாங்கியவன் 
  • ப்ரவ்ருத்தே - ஈடுபடத் தயாராக 
  • ஸ²ஸ்த்ர ஸம்பாதே - அம்புகள் எய்ய 
  • த⁴நுர் - வில் 
  • உத்³யம்ய - ஏந்திக் கொண்டு 
  • பாண்ட³வஹ - பாண்டுவின் மகன் (அர்ஜுனன்)

பாண்டவ கெளரவர்களிடம் அம்புகள் பறக்க விடப்பட்டன. அச்சமயத்தில் ஹனுமானின் கொடியைத் தாங்கிய தேரில் அமர்ந்திருந்த பாண்டுவின் மகன் பார்த்தன், தனது வில்லை எடுத்து அம்புகள் எய்வதில் ஈடுபட தயாராக இருந்தவன், அதன் பின் அணி வகுக்கப்பட்ட படையில் திருதராஷ்டரின் புதல்வர்களை பார்த்தவுடன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கி அர்ஜுனன் பின்வருமாறு கூறினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment