||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 5
ஸ்வயம்பூ⁴: ஸ²ம்பு⁴ர் ஆதி³த்ய:
புஷ்கராக்ஷோ மஹாஸ் வந:|
அநாதி³ நித⁴நோ தா⁴தா
விதா⁴தா தா⁴து ருத்தம:||
- 37. ஸ்வயம்பூ⁴ஸ்² - தானே தோன்றியவர். சுயமாக பிறந்தவர்.
- 38. ஸ²ம்பு⁴ர் - பேரின்பத்தை விளைவிப்பவர். தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறார்.
- 39. ஆதி³த்யஃ - சூரிய மண்டலத்தின் நடுவில் தங்க நிறத்தில் இருப்பவர். சூரியனின் மைய ஆற்றல் உடையவர்.
- 40. புஷ்கராக்ஷோ - தாமரை மலரைப் போன்ற அழகிய கண்களை உடையவர்.
- 41. மஹாஸ்வநஹ - வழிபடுவதற்கு உவப்பான திருநாமத்தை உடையவர். ஆழமான மற்றும் எதிரொலிக்கும் குரல் கொண்டவர். வேதங்களின் உருவகம்.
- 42. அநாதி³ நித⁴நோ - ஆதியும் அந்தமும் இல்லாதவர். நித்யமானவர். அவருக்கு பிறப்பு, சிதைவு அல்லது இறப்பு இல்லை.
- 43. தா⁴தா - படைப்பவர். பிரபஞ்சத்தை உருவாக்கியவர். ஆதரிப்பவர் மற்றும் நிலை நிறுத்துபவர். செயல்களின் பலனை உருவாக்குகிறார்.
- 44. விதா⁴தா - கர்ப்பத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்பவர்.
- 45. தா⁴து ருத்தமஹ - பிரம்மத்தை விட மிக உயர்ந்தவர். எல்லாவற்றின் இறுதியான அங்கமாக இருப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment