About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 35

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 5

ஸ்வயம்பூ⁴: ஸ²ம்பு⁴ர் ஆதி³த்ய: 
புஷ்கராக்ஷோ மஹாஸ் வந:|
அநாதி³ நித⁴நோ தா⁴தா 
விதா⁴தா தா⁴து ருத்தம:||

  • 37. ஸ்வயம்பூ⁴ஸ்² - தானே தோன்றியவர். சுயமாக பிறந்தவர்.
  • 38. ஸ²ம்பு⁴ர் - பேரின்பத்தை விளைவிப்பவர். தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறார்.
  • 39. ஆதி³த்யஃ - சூரிய மண்டலத்தின் நடுவில் தங்க நிறத்தில் இருப்பவர். சூரியனின் மைய ஆற்றல் உடையவர்.
  • 40. புஷ்கராக்ஷோ - தாமரை மலரைப் போன்ற அழகிய கண்களை உடையவர்.
  • 41. மஹாஸ்வநஹ - வழிபடுவதற்கு உவப்பான திருநாமத்தை உடையவர். ஆழமான மற்றும் எதிரொலிக்கும் குரல் கொண்டவர். வேதங்களின் உருவகம்.
  • 42. அநாதி³ நித⁴நோ - ஆதியும் அந்தமும் இல்லாதவர். நித்யமானவர். அவருக்கு  பிறப்பு, சிதைவு அல்லது இறப்பு இல்லை.
  • 43. தா⁴தா - படைப்பவர். பிரபஞ்சத்தை உருவாக்கியவர். ஆதரிப்பவர் மற்றும் நிலை நிறுத்துபவர். செயல்களின் பலனை உருவாக்குகிறார்.
  • 44. விதா⁴தா - கர்ப்பத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்பவர்.
  • 45. தா⁴து ருத்தமஹ - பிரம்மத்தை விட மிக உயர்ந்தவர். எல்லாவற்றின் இறுதியான அங்கமாக இருப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment