About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 16 August 2023

ஶ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அவினய மபநய விஷ்ணோ தமய மந:
ஸமய விஷய ம்ருகத்ருஷ்ணாம்|
பூத தயாம் விஸ்தாரய 
தாரய ஸம்ஸார ஸாகரத:|| 

ஹே விஷ்ணோ! எனது பணிவின்மையைப் போக்கு! மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

2 திவ்யதுனீ  மகரந்தே பரிமள 
பரிபோக ஸச்சிதானந்தே|
ஶ்ரீபதி பதாரவிந்தே பவபய 
கேதச்சிதே வந்தே:||

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத் சித் ஆனந்தமாகியவற்றை வாசனையாகக் கொண்டதும், உலகில் சம்சார துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித் தாமரைகளை வணங்குகின்றேன்.

3 ஸத்யபி பேதாபகமே நாத 
தவாஹம் ந மாமகீநஸ்த்வம்|
ஸாமுத்ரோ ஹி தரங்க:  
க்வசன ஸமுத்ரோ ந தாரங்க:|| 

ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே. தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டியது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

4 உத்ருதநக நகபிதநுஜ தநுஜ 
குலாமித்ர மித்ரசசித்ருஷ்டே|
த்ருஷ்டே பவதி ப்ரபவதி 
நபவதி கிம்பவதி ரஸ்கார:|| 

கோவர்தன மலையை தூக்கியவரே! இந்திரனின் இளையவரே! அசுரக் கூட்டத்தை அழித்தவரே! சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே! உங்களுடைய கருணைக் கடைக்கண் பார்வை ஒருவனுக்கு கிடைக்குமானால் எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

5 மத்ஸ்யாதிபி  ரவதாரைர் வதாரவதா 
அவதா ஸதாவஸுதாம்|
பரமேச்வர பரிபால்யோ 
பவதா பவதாபீதோஹம்||

ஹே பெருமாளே! மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ! 

6 தாமோதர குணமந்திர 
ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த|
பவ ஜலதி மதனமந்தர பரமம் 
தரமபனயத்வம் மே|| 

தாமோதரனே! குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையொத்த முகம் கொண்டவனே! கோவிந்த! ஸம்ஸாரக் கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!

7 நாராயண கருணாய சரணம் 
கரவாணி தாவகௌ சரணௌ|
இதி ஷட்பதீ மதீயே 
வதனஸரோஜே ஸாதாவஸது||

ஹே நாராயண கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

இதனைப் பாராயணம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்‌ஷம், ஞானம் உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும்.

॥இதி ஸ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்॥

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment