About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 16 August 2023

திவ்ய ப்ரபந்தம் - 15 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 15 - திருவோணத்தான் உலகை ஆளுவான்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

பேணிச் சீருடைப்* பிள்ளை பிறந்தினில்*
காணத் தாம் புகுவார்* புக்குப் போதுவார்*
ணொப்பார்* இவன் நேரில்லை காண்* 
திருவோணத்தான்* உலகாளும் என்பார்களே|

  • சீர் உடை  - நற்குணம் மிக்க
  • பிள்ளை - பிள்ளை கிருஷ்ணன்
  • பேணி - கம்சன் கண் படாதபடி
  • பிறந்தினில் - பிறந்தவனைக் காத்து வந்ததால்
  • தாம் - ஆய்ப்பாடி ஆயர்கள்
  • காண - பிள்ளையைக் காண ஆசைப்பட்டு
  • புகுவார் - உள்ளே நுழைவாரும்
  • புக்கு - உள்ளே போய் பார்த்து
  • போதுவார் - திரும்புவாரும்
  • ஆணொப்பார் இவன் - இவனுக்கு ஈடான ஆண்
  • நேர் இல்லை காண் - யாரும் இல்லை
  • திரு வோணத்தான் - திருவோணத்தில் அவதரித்தவன்
  • உலகு ஆளும் - உலகங்களை எல்லாம் ஆள்வான்
  • என்பார்களே - என்று சொல்லலானார்கள்

கம்சனை போன்ற துஷ்டர்களிடமிருந்து காத்து வந்த இறை ஒளி வீசும், சிறந்த புகழ்களை உடைய குழந்தையான கண்ணன் பிறந்திருந்த நந்தகோபருடைய மாளிகைக்கு, குழந்தையைப் பார்க்க அவ்வூர் ஆயர் குலத்து பெருமக்கள் அவ்வப்போது அன்போடு பார்ப்பதும் வருவதுமாக இருந்தார்கள். அவர்களில் சிலர் இந்த உலகத்திலேயே இதுவரைக்கும், இக்குழந்தைக்கு ஒப்பான (கண்ணனுக்கு) நிகர் வேறு இல்லை என்பார்கள். இவன் திருவோண திருநக்ஷத்திரத்தில் பிறந்திருப்பதால் எல்லா உலகங்களையும் ஆளக்கூடிய திறன் படைத்தவன் என்பார் சிலர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment